Thursday, December 20, 2018

பாகம் 3 கடவுள்களின் மர்மம்! மனிதர்களை அவதானிக்கும் இருண்ட கிரகம்.. வெளிப்பட்ட இரகசியம்


Wednesday, December 19, 2018

பாகம் 1 பூமியில் உலாவும் வேற்றுக்கிரகவாசிகள்! கடவுள்கள் யார்? மறைக்கப்படும் இரகசியங்கள்



பாகம் 1 பூமியில் உலாவும் வேற்றுக்கிரகவாசிகள்! கடவுள்கள் யார்? மறைக்கப்படும் இரகசியங்கள்




நவீன கால ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் தற்போது உலகம் தொடர்பில் மிகப்பெரிய உண்மையினை வெளிப்படுத்த ஆரம்பமாகியுள்ளனர்.
அதாவது பூமியானது வேற்றுக்கிரகவாசிகளின் தேவை நிமித்தம் உருவாக்கப்பட்டது. மனிதர்களை படைத்தது வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்களே என்பதே அது.
இது இப்போதைய மனித சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் என்றாலும் உண்மை இதுவே என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பல அதிகார மட்டங்களும் இந்த உண்மைகள் வெளி வருவதனை தடுக்கின்றன. காரணம் உலகத்தில் இதனால் பல குழப்பங்களும், கட்டுப்பாடற்ற தன்மையும் ஏற்படும் என்பதால் எனக் கூறப்படுகின்றது.
பண்டைய காலங்களில் பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்ததற்கான ஆதாரங்கள் பூமி முழுவதும் உள்ளன. அப்படி என்றால் அவர்கள் ஏன் வந்தார்கள்?
பூமியில் அவர்களுக்கு என்ன தேவை இருந்தது? மனிதர்களை எப்படி உருவாக்கினார்கள்? இப்போது அவர்கள் எங்கே? மதங்கள் ஏன் உருவாக்கப்பட்டன?
இவ்வாறான பல கேள்விகளோடு, வேற்றுக் கிரகவாசிகள் பற்றிய பல இரகசியங்களுக்கும் ஆய்வாளர்கள் விடை கூற முற்பட்டுள்ளனர் அவை பற்றி பார்க்கலாம்.
நாம் வாழும் இந்த பூமி நமக்காக மட்டும் படைக்கப்பட்டது, மனிதர்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டது என்பதனை இப்போதைய விஞ்ஞானிகள் எவருமே நம்பவில்லை.
பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் மனிதர்களின் உருவாக்கம் போன்றன பற்றி காலம் காலமாக மனித குலம் நம்பி வருவது பொய்களே. இன்று வரை ஆய்வாளர்களும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் உலகத்தில் மனிதர்களை உருவாக்கியது வேற்றுக் கிரகவாசிகளே என்பதனை ஆய்வாளர்கள் உலக மக்களுக்கு எடுத்துக் கூற முயற்சி செய்கின்றார்கள்.
என்றாலும் கூட மதம் என்ற கட்டுக்குள் மனித இனம் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் விஞ்ஞானம் மற்றும் அறிவியல் கூறும் பல உண்மைகளை ஏற்றுக் கொள்வது இல்லை.
அப்படியாக ஏதாவது கூறும் இடத்தில் வீண் வாதங்களை மதம் வாயிலாக மனித இனம் பார்ப்பதனால் பல வகை உண்மைகள் வெளிப்படுவது இல்லை. உண்மைத் தன்மை ஆராயப்படுவதும் இல்லை.
பிரபஞ்சம் உருவாகிய பின்னர் பல பில்லியன்கள் வருடங்கள் சென்ற பின்னரே பூமி உருவானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை அனைத்து தரப்பும் ஏற்றுக்கொண்டது. அதேபோல பூமி தவிர்த்து ஏனைய கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதனையும் இப்போது அனைவரும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.
பூமி உருவாக்கப்பட பல பில்லியன் வருடங்களுக்கு முன்பே பிரபஞ்சம் தோன்றியது என்றால், ஏற்கனவே உருவான பிரபஞ்சத்தில் உள்ள கிரகங்களில் வேற்றுக் கிரகவாசிகள் வாழ்வது சாத்தியம்.
அவ்வாறு வாழ்ந்தவர்களே பூமி உருவான பின்னர் பூமியில் மனித இனத்தை தோற்று வித்தது என தற்போது ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றார்கள்.
உலகம் இந்த உண்மையை அறிந்தபோதும் வெளியவிட மறுக்கின்றன. இந்த விடயத்தை ஆய்வாளர்கள் நிருவும் ஆதாரபூர்வமான தகவல்களைப் பார்க்கலாம்.
ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் தமது கடவுள்கள் வானில் இருந்து வந்தவர்களாக நம்புகின்றனர். அவ்வாறு வந்தவர்கள் வேற்றுக்கிரக வாசிகளே என்பது ஆய்வாளர்கள் கருத்து.
இன்று காணப்படும் ஒவ்வோர் மத ரீதியான நாகரீங்களுக்கும் பண்டைய காலத்தில் பிரம்மாண்டமான கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பல மத வழிபாட்டு தலங்கள் இன்றைய தொழில்நுட்பத்திற்கு சாத்தியமற்ற வகையில் கட்டப்பட்டு உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றார்கள்.
இங்கு தரப்பட்டுள்ள புகைப்படங்கள் பண்டைய காலத்தில் கட்டப்பட்ட இப்போதைய மனித சக்திக்கும் சாத்தியமற்ற கட்டடங்களை காட்டுகின்றன.
இவ்வாறான கட்டடங்கள் வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்களின் வாழ்ந்த இடங்களாக இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் வாதம்.
ஆனால் காலப்போக்கில் அவை கடவுள்களின் இருப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது அப்போதைய நாகரீகம் தனது தலைவனை கடவுளாக பாவித்தாலேயே இந்த வகையில் கடவுள்கள் தோன்றியதாக கூறப்படுகின்றது.

இவை தவிர பூமி முழுதும் வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பிலான ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் பூமியின் ஆரம்ப காலப்பகுதிகளில் வேற்றுக்கிரகவாசிகள் பூமியுடன் கொண்டிருந்த தொடர்பை பற்றி தெளிவாக கூறுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் ஏன் வருகைத் தரவேண்டும்?
அமெரிக்கா நிலவில் கால் பதித்தது முதல் நிலவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நிலவு முழுதும் ஹிலியம் 3 (Helium 3) எனப்படும் கணிமம் நிறைந்துள்ளதாக கண்டுபிடித்தனர்.
நிலவில் மட்டுமல்லாது எமது சூரிய குடும்பத்தில் உள்ள பல கிரகங்களில் இதே வகை கணிமம் இருப்பதனையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த ஹிலியம் 3 கணிமம் ஆனது சிறந்த எரிபொருள் ஆகும். இதனால் பூமியில் ஏற்படும் எரிபொருள் பற்றாக்குறையை பூமிக்கு அருகில் உள்ள நிலவில் இருந்து எடுத்து வந்து பயன் படுத்தும் ஆய்வில் சர்வதேசம் முனைப்பு காட்டுகின்றது.
இதே போன்று ஆரம்பகால பூமியில் மனிதர்கள் இல்லாத போது பூமியில் இருந்து வேற்றுக்கிரகவாசிகள் ஓர் கணிமத்தை எடுத்துக் கொண்டு போக வந்திருக்கலாம் என Zecharia Sitchin எனப்படும் ஆய்வாளர் தெரிவிக்கின்றார்.
அவ்வாறு அவர்கள் வந்ததற்கான ஆதாரங்களே இப்போது பூமி முழுவதும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.
மேலும், பூமியில் இருந்து வேற்றுக்கிரகவாசிகள் தங்கம் எனப்படும் கணிமத்தையே கொண்டு செல்ல பூமிக்கு வந்திருக்கலாம் எனவும் அவர் கூறுகின்றார்.
ஆரம்பகாலத்தில் தங்கம் பூமியில் நிறைந்து வழிந்தது என்பதை வரலாறுகளும், புராணங்களும் கூறுகின்றன. அப்படி என்றால் அவை இப்போது எங்கே?
தங்கம் எனப்படும் மதிப்பு மிக்க கணிமம் வேற்றுக் கிரகவாசிகள் பூமியில் இருந்து கொண்டு சென்றுள்ளனர் என்கிறார் ஆய்வாளர் Zecharia Sitchin. அதனை அவர்கள் தங்களின் மின்சாரத் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு இருக்கலாம் எனவும் அவர் கூறுகின்றார்.
தங்கம் எனப்படுவது மின்சாதனங்களை (சேர்க்கிட்) செய்வதற்கு சிறந்த பொருள். தங்கம் சிறந்த மின் கடத்தி. அது மட்டுமல்லாது விண்வெளி ஓடங்களை நிர்மானிப்பதற்கும் தங்கம் மிக மிக முக்கியமானது.
அதேபோல் தங்கம் எக்காலத்திலும் அழியாத உலோகம் எனப்படுவதோடு தங்கம் மின் சாதன உற்பத்திக்கு மிக முக்கியம்.
இவ்வாறான தங்கத்தை கொண்டு செல்வதற்காகவே பூமிக்கு வேற்றுக் கிரகவாசிகள் வந்திருக்கலாம் என்பதும் Zecharia Sitchin ஆய்வாளரின் கருத்து. அதற்கான ஆதாரங்களை பல புத்தகங்கள் மூலம் அவர் நிருவுகின்றார்.
இதனை நிரூபிக்கும் வகையில் 90000 ஆயிரம் பழமை வாய்த தங்கச் சுரங்கங்கள் தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 50000 வருடங்கள் பழைமை வாய்ந்த தங்கச் சுரங்கம் இன்றும் பேரு நாட்டில் உள்ளது.
மனித நாகரீகம் அற்ற காலத்தில் இப்படியான தங்கச் சுரங்கம் எப்படி வந்தது என்பதை ஆழ சிந்திக்கும் போது வேற்றுக்கிரகவாசிகள் காரணம் வந்து போகின்றது. இவ்வாறான இடங்கள் பல பூமி எங்கும் உள்ளன.
நாகரீகமே வளராத காலத்தில் மனிதன் தங்கத்தை தோண்டி எடுத்தான் என்பது வேடிக்கையான விடயமே.
தனை மேலும் வலுப்படுத்துகின்றது பேருவில் நாஸ்கா எனப்படும் தளம். மனிதர்கள் இன்று வாழாத இந்த இடம் பற்றிய இரகசியம் இன்றும் வெளிப்படுத்தப்பட வில்லை. (இங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.)
சுமார் 500 சதுர கி.மீ பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த இடம். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ஓர் விமான ஓடு தளம். அப்போதைய மனிதர்களால் இதனை அமைப்பது எந்த வகையிலும் சாத்தியம் அற்றது. அக்காலத்திற்கு விமானத்தளம் என்பது அவசியமே இல்லை.
வானில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும் வகையில் பிரம்மாண்டமான சித்திரங்கள் இங்கு வரையப்பட்டுள்ளன. இவை வானில் இருந்து வரும் விண்கலங்களுக்கு விடுக்கப்படும் சமிச்ஞைகளாகவே காணப்படுகின்றன.
இந்த நாஸ்கா தளம் மூலம் பூமியில் இருந்து தங்கம் கொண்டு செல்லப்பட்டிருக்க முடியும் என்பது Zecharia Sitchin ஆய்வாளரின் வாதம். இதனை பல ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
இவை இவ்வாறு இருக்க.., பூமியில் மனிதர்கள் தோன்றியது எப்படி? அதனால் வேற்றுக்கிரக வாசிகளுக்கு என்ன இலாபம்? மதங்கள் எப்படி உருவாகின அடுத்து வரும் பதிவில் பார்க்கலாம்...



பாகம் 2. வேற்றுக்கிரகவாசிகளும் மனிதர்களும்! கடவுள்கள் ஏன் தெரிவதில்லை?

பாகம் 2. வேற்றுக்கிரகவாசிகளும் மனிதர்களும்! கடவுள்கள் ஏன் தெரிவதில்லை?

பாகம் 2. வேற்றுக்கிரகவாசிகளும் மனிதர்களும்! கடவுள்கள் ஏன் தெரிவதில்லை?


பாகம் 01

இன்று வரை ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே தான் வருகின்றது. இப்படித்தான் மனித இனம் வளர்ச்சியடைந்தது என்பதை எவரும் அடித்துக் கூறவில்லை.
அதனால் ஒரு வித சர்ச்சையான விடயமாகவே இந்த மனித இனத்தின் தோற்றம் காணப்படுகின்றது. அந்த வகையில் பூமியில் மனித இனத்தை தோற்றுவித்தவர்கள் வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்தவர்களே என ஆய்வாளர்கள் நிறுவுகின்றனர்.
இப்போதைய மனித சமூகம் இதனை ஏற்றுக் கொள்ளுமா? மதங்கள் கடவுள்கள் என்ற ஓர் கட்டுப்பாட்டில் வாழ்ந்து கொண்டு வரும் மனித இனம் இதனை ஏற்றுக் கொள்ளுமா? இவை மிகப்பெரிய கேள்விகளே.
பூமிக்கு வேற்றுக் கிரகவாசிகள் வருகை தந்தனர் எனவும், அவர்கள் பூமியில் தங்கம் என்ற கனிமத்தை எடுக்கவே வந்தார்கள் எனவும் கடந்த பதிவில் பார்த்திருந்தோம்.

அதை  காண இங்கே<<கிளிக்  >> செய்ங்கள்  
அதன் தொடர்ச்சியாக உண்மைத் தன்மைப் பற்றியும், மனித இனத்தின் தோற்றம் பற்றியும் ஆய்வாளர்கள் கூறியுள்ள அதிர்ச்சிமிக்க தகவல்களை பார்க்கலாம். 
பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் தங்கத்தை எடுக்கவே வந்தார்கள் என்பதனை நிரூபிக்கும் ஆதாரங்கள் பலவற்றை ஆய்வாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் கி.மு 3000 ஆண்டுகளில் வாழ்ந்து வந்த சுமேரிய நாகரீகம் ஓர், ஆதி நாகரீகம் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் நாகரீகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கண்டு பிடிக்கப்பட்ட எழுத்துப் படிவங்களில் ஓர் விடயம் கூறப்பட்டுள்ளது.
அதாவது விண்வெளியில் இருக்கும் ஓர் நட்சத்திரத்தில் இருந்து அநூனாக்கி (Anunnaki) எனப்படும் தமது கடவுள் பூமியில் தங்கத்தை எடுப்பதற்காக வந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் கடவுள், அவர்களை (மனிதர்களை) தமது அடிமைகளாக இருக்க வேண்டும் என கட்டளையிட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்களை 1976ஆம் ஆண்டு Zecharia Sitchin ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்தன.
அதிலும் குறிப்பாக உலகில் முதல் மனிதன் ஆதாம் என பைபிள் கூறுகின்றதனை, அதற்கு முன்னராகவே சுமேரிய கல்வெட்டுப் படிமங்களில் உலகின் முதல் மனிதன் அடெமு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுமார் 5500 வருடங்களுக்கு முன்பே இந்த மனித தோற்றம் பற்றிய சுமேரியப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆச்சரியம் மிக்கதே.
மேலும் மனித தோற்றம் வளர்ச்சி போன்ற அனைத்தும் சுமேரிய குறிப்புகளில் கூறப்படுகின்றது.
வானத்தில் இருந்து வந்த கடவுள் தம்மை அவருக்கு கீழ் வேலை செய்ய வேண்டும் எனக் கட்டளையிட்டதாகவும் எழுதப்பட்டுள்ளதை Zecharia Sitchin எனப்படும் ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார்.
அதன் அடிப்படையிலும், பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் ஊடாகவும் ஆய்வுகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பூமிக்கு தங்கம் எடுக்க வந்த வேற்றுக்கிரகவாசிகளுக்கு.,
அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றவும், அவர்களுக்கு கீழ் வேலை செய்யவும் மனிதர்கள் தேவைப்பட்டிருக்கலாம்.
அதற்காக ஆரம்பகால பூமியில் புத்திசாலித்தனம் மிக்க உயிரினமான ஓர் குரங்கு வகையை தேர்ந்து எடுத்து அவற்றின் மரபணுக்களோடு, தமது மரபணுக்களையும் இணைத்து பூமியில் மனித இனம் தோற்று விக்கப்பட்டிருக்க வேண்டும் என Zecharia Sitchin அடித்துக் கூறுகின்றார்.
இதனை பல ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. உதாரணமாக இன்று வரை மனிதனின் பரிணாம வளர்ச்சி சர்ச்சைக்கு உரியதாகவே காணப்பட்டு வருகின்றமை சிறந்த எடுத்துக்காட்டு.
அதேபோன்று ஆதி மனிதர்கள், பண்டைய கால குகை ஓவியங்களில் தமது கடவுள்கள் அல்லது தலைவர்கள் வானத்தில் இருந்து வந்தவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆதிகாலத்தில் அதாவது கப்பல் பயணமே சாத்தியமற்ற காலப்பகுதியில் விண்வெளிப்பயணம் மேற்கொள்ளப்பட்டமைக்கு ஆதாரங்களும் பூமியில் காணப்படுகின்றது.
இவ்வாறாக வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக மனித இனத்தை தோற்றுவித்ததாகவும், மனிதர்களை அவர்கள் பயன்படுத்திக் கொண்டதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதன்படி மனிதர், தமக்கு அறிவு கொடுத்து, பலத்தை அதிகரித்தவர்களை கடவுள்களாக ஏற்றுக் கொண்டு அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றி வைத்துள்ளனர்.
அவ்வாறு வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்கள் தங்கிய இடங்களே காலப்போக்கில் வழிபாட்டுத்தலங்களாக மாறிப் போனதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு உதாரணமாக பிரமிட் என்ற கட்டுமானத்தில் கற்களுக்கு இடையே பூசப்பட்டுள்ள ஒரு வித பசைத் தன்மை மிக்க கனிமம் பூமியில் எங்குமே இல்லாத கனிமத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதை முன்வைக்கின்றனர் ஆய்வாளர்கள்.
அத்தோடு எத்தகைய தாக்கத்தாலும் அழிக்க முடியாத சக்தி மிக்கதோர் கனிமத்தைக் கொண்டு இந்த பிரமிட்டுகள் கட்டப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது போன்று இப்போதைய மனித தொழில் நுட்ப அறிவுக்கு எட்டாத பல அதிசயங்கள் ஆதிகாலத்தில் உருவாக்கப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
புராண குறிப்புகள், கதைகள் போன்ற அனைத்துமே கூறுவது தமது கடவுள்கள் வேறு உலகத்தில் இருந்து பறந்து வந்தவர்கள் என்பதனையே.
மேலும் மதங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் கூறினாலும் அடிப்படையில் இந்த ஓர் கருத்தையே அனைத்து மதங்களும் முன்வைக்கின்றன என்பது தெளிவு.
அதேபோல் இப்போது வாழும் எந்த மனிதனுக்கும் கடவுளாக கூறப்பட்டவர்கள் கண்ணுக்கு புலப்படுவதில்லை இது ஏன்? என்ற கேள்வி எவருக்கும் இலகுவில் வந்து விடாது.
அதற்கான பதில் ஆரம்ப காலத்தில் கடவுளாக பார்க்கப்பட்டவர்கள் மனிதர்களின் வாழ்கையோடு பயணித்துள்ளனர், அதனால் அவர்களின் கண்களுக்கு தெரிந்தனர்.
ஆனால் இப்போது அவ்வாறான கடவுள்கள் பூமியை விட்டு சென்று விட்டனர் அதனால் அவர்கள் (வேற்றுக்கிரக வாசிகள்) புலப்படுவதில்லை என்பதே ஆய்வாளர்களின் கருத்து.
ஆனாலும் இன்றும் அவர்கள் பூமிவாசிகளை கண்காணித்தவாறே இருக்கின்றார்கள் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்துகள் உண்மையாயின், ஏன் இப்போது பூமிவாசிகளுக்கு வேற்றுக்கிரகவாசிகள் தென்படுவதில்லை? என்ற கேள்வி எழக்கூடும்.
இதற்கான பதிலோடு, யார் அந்த Anunnaki எனப்பட்ட கடவுள்? இந்துக் கடவுள்களோடு இவருக்கு தொடர்பு உண்டா?
அவர் மூலம் மனித இனம் கற்றுக் கொண்டது எதனை? வேற்றுக்கிரகவாசிகளுக்கும் இருண்ட கிரகம் எனப்படும் Planet Nibiru எனப்படும் கிரகத்திற்கும் என்ன தொடர்பு?
பூமியின் அழிவு இந்த கிரகத்தாலேயே ஏற்படும் என புராணக்கதைகள் கூறுவதோடு ஆய்வாளர்களும் தெரிவித்து வருகின்றனர். அப்படியாயின் அவை ஏன் வெளி உலகிற்கு சொல்லப்படவில்லை இதற்கான பதில்கள் அடுத்த பதிவில்.,