Wednesday, February 24, 2016

ஒரு மணிநேரம் பற்களை அலுமினியத்தாள் கொண்டு மூடினால் என்ன நடக்கும் தெரியுமா?

ஒரு மணிநேரம் பற்களை அலுமினியத்தாள் கொண்டு மூடினால் என்ன நடக்கும் தெரியுமா?


பலரும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க பல வழிகளை தேடிக் கொண்டிருப்பார்கள். அதில் சிலர் பணம் செலவழித்து பல் மருத்துவரிடம் பற்களை சுத்தம் செய்வார்கள். பலர் எப்போதும் போன்று டூத் பேஸ்ட்டுகளைப் பயன்படுத்தி வருவார்கள். 


பொதுவாக பற்களை வெண்மையாக்குவதற்கு விற்கப்படும் பேஸ்ட்டுகளில் கார்பமைடு பெராக்ஸைடு மற்றும் சிறிய துகள்கள் பற்களின் எனாமலை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பற்களை வெண்மையாக்க பல இயற்கை வழிகளும் உள்ளன. 

இங்கு அதில் ஒரு அற்புதமான வழி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றினால் நிச்சயம் உங்கள் பற்களை வெள்ளையாக மின்னச் செய்யலாம்.

பற்களை வெள்ளையாக்கும் முறை 

பற்களை வெள்ளையாக்குவதற்கு ஓர் நேச்சுரல் டூத் பேஸ்ட்டும், அலுமினியத்தாளும் அவசியம்.

தேவையான பொருட்கள் 
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன் 
உப்பு - 1/2 டீஸ்பூன் 
தண்ணீர் - சிறிது அலுமினியத்தாள்

செய்யும் முறை 
பேக்கிங் சோடா, உப்பு மற்றும் நீரை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை பற்களில் தடவிக் கொள்ள வேண்டும்.

அலுமினியத்தாள் 
பின் படத்தில் காட்டியவாறு அலுமினியத்தாளைக் கொண்டு பற்களை மூடி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பற்களை துலக்கவும் 
1 மணிநேரம் கழித்து, டூத் பிரஷ் கொண்டு பற்களை மென்மையாக தேய்த்து, குளிர்ந்த நீரில் நன்கு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

குறிப்பு இந்த முறையை மாதத்திற்கு 2 முறைக்கு மேல் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால் பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.





Tuesday, February 23, 2016

100 ஆண்டுகளாய் சாகாமல் வாழ்கிறார் ரஷ்ய அதிபர் புதின்..!?

சிக்கியது புகைப்பட ஆதாரம் : 100 ஆண்டுகளாய் சாகாமல் வாழ்கிறார் புதின்..!?

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் ரஷ்ய அதிபர் புதினுக்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு. அப்படியானதொரு ஆளுமைத்திறனை கொண்ட இவரை உலகின் சூப்பர் பவர் நாட்டு தலைவர்கள் தொடங்கி பல தீவிரவாத இயக்கங்கள் வரை காண்கானித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம். 

அப்படியான, விளாதிமிர் புதின் 100 ஆண்டுகளாய் சாகாமல் வாழ்கிறார் என்றும், அவருக்கும், மர்மமான டைம் டிராவலுக்கும் தொடர்பு உண்டு என்பது போன்றும் பல புகைப்பட ஆதாரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக்கொண்டு வருகிறது.

சதி ஆலோசனை
சதி ஆலோசனை
சமீபத்தில், கான்ஸ்பிரஸி தியேரிஸ்ட்ஸ் (Conspiracy theorists) எனப்படும் சதி ஆலோசனை கோட்பாட்டாளர்களிடம், 1920-ஆம் ஆண்டு மற்றும் முறையே 1941-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இரண்டு வெவ்வேறு புகைப்படங்கள் கிடைத்துள்ளது.

அச்சு அசல்

அச்சு அசல்
அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு நபர்களும் அச்சு அசலாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்போன்றே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1920 ஆண்டு

1920 ஆண்டு
சரியாக 1920-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் இருக்கும் ஒரு ரஷ்ய ராணுவ வீரன், புதினின் முக ஜாடையோடு அதிகமாக ஒற்றுப்போவதை காண முடிகிறது.

1941 ஆண்டு

1941 ஆண்டு
மேலும் அதே போன்று 20 ஆண்டுகள் கழித்து, அதாவது 1941-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படத்திலும் புதின் முகஜாடையோடு அதிகம் ஒற்றுப்போகும் ரஷ்ய ராணுவ வீரனை காண முடிகிறது.

டைம் டிராவல்

டைம் டிராவல்
இதன் மூலம் ரஷ்ய அதிபர் புதின், மிகவும் மர்மமான கோட்பாடான டைம் டிராவல் (Time Travel) உடன் தொடர்பு உடையவர் என்று சில சதி ஆலோசனை கோட்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

100 ஆண்டுகள்

100 ஆண்டுகள்
மேலும் புதின் 100 ஆண்டுகள் கழிந்தும் வாழும், வயதில்லாத மற்றும் மரணமில்லாத மனிதர் என்றும் சதி ஆலோசனை கோட்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

வ்லாட் தி இம்பாலர்

வ்லாட் தி இம்பாலர்
மேலும் புதின் என்பவர், 1431-ஆம் ஆண்டு பிறந்த வ்லாட் தி இம்பாலர் (Vlad the Impaler) என்று சிலர் நம்புகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோனாலிஸா

மோனாலிஸா
சமீபத்தில் லியொனார்டோ டா வின்சி வரைந்த பிரபல மோனாலிஸா ஓவியத்தில் புதின் முகஜாடை இருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகி வைரல் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

லியொனார்டோ டா வின்சி

லியொனார்டோ டா வின்சி
1500-களில் தான் மோனாலிஸா ஓவியம் வரையப்பட்டது என்பதால் வ்லாட் தி இம்பாலரை புதின் என்று நம்புபவர்கள் மோனாலிஸாவை வரைந்த காலத்தில் லியொனார்டோ டா வின்சி உடன் வ்லாட் தி இம்பாலர் இருந்துள்ளார் என்றும் நம்புகின்றனர்.

கிரேக்க நாட்டு தளபதி

கிரேக்க நாட்டு தளபதி
ட்விட்டரில் பதிவான இந்த ஓவியத்தில் புதின் முகஜாடையோடு ஒற்றுப்போகும் கிரேக்க நாட்டு தளபதி ஒருவரை காண முடிகிறது.

டச்சு நாட்டு ஓவியர்

டச்சு நாட்டு ஓவியர்
ஜான் வான் ஐக் (Jan van Eyck) என்ற டச்சு நாட்டு ஓவியர் வரைந்த பல ஓவியங்களிலும் இருக்கும் ஒரு நபர் விளாதிமிர் புதினின் முகத்தை ஒற்று இருக்கிறார் என்பதையும் ட்விட்டர் பதிவு ஒன்று வெளிப்படுத்தியது.

கலைஞர் எம்.சி.எஸ்சர்

கலைஞர் எம்.சி.எஸ்சர்
மேலும் 1972-ஆம் ஆண்டு மரணமடைந்த கலைஞர் எம்.சி.எஸ்சர் (M. C. Escher) ஓவியப்படைப்பிலும் புதின் முகத்தை காண முடிகிறது என்பதையும் ட்விட்டர் பதிவு ஒன்று வெளிப்படுத்தியது.

நிரூபிக்கப்படவில்லை

நிரூபிக்கப்படவில்லை
மேலும் சதி ஆலோசனை கோட்பாட்டாளர்களிடம் கிடைத்த மற்றும் சமூக வலைதளங்களில் நிரம்பிய எந்த ஒரு புகைப்படமுமே இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமேசான் நதியின் கொலைகார மீன்கள்...!!!

அமேசான் நதியின் கொலைகார மீன்கள்...!!! 



மீன்களில் நாம் சாப்பிடக் கூடிய மீன்கள் பல உண்டு. சிக்கினால் நம்மையும் சாப்பிடும் சுறா, ஆக்டோபஸ் போன்றவையும் கடலில் வசிக்கின்றன. ஆனால் உருவத்தில் மிகச்சிறியதாக, ராட்சத மீன்களை விட மிகக் கொடூரமான ரத்த வேட்கை பிடித்த கொலைகார மீனும் இருக்கிறது.

தென் அமெரிக்கா கண்டத்தில் ஓடும் அமேசான் நதியில்தான் அந்த மீன்கள் வசிக்கின்றன. 'பிரான்ஹா' மீன் எனப்படும் அந்த மீன்கள் கூட்டம் கூட்டமாக காணப்படும்.
MONSTER RIVER
ரம்பம் போன்ற கூறிய பற்கள் தான் இந்த மீனின் ஆயுதம். இதற்கு பசி வந்து விட்டால் எது கிடைத்தாலும் சாப்பிட்டு விடும். நதிக்கு தண்ணீரை குடிக்க வரும் எலி முதல் யானை வரை எல்லாமே இதன் கண்களுக்கு இறைதான். இதன் கொடூரமான ரத்த வெறிக்கு ஒரு உதாரணத்தை சொல்கிறார்கள். 1976 - ம் ஆண்டு உருபு நதி என்ற ஒரு நதியில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு பஸ் கவிழ்ந்து விட்டது. தகவல் கிடைத்த சில மணி நேரங்களுக்குள் ஒரு மீட்புக் குழு அந்த நதிக்கு சென்றது. ஆனால் அவர்களுக்கு கிடைத்தது பஸ் பயணிகளில் ஒரு சிலருடைய எலும்புக் கூடுகள் மட்டுமே.


ஒரு சிறிய மீன் எப்படி இவ்வளவு பயங்கரமான பிராணியாக இருக்கிறது என்பதை தெளிவாக கண்டறிந்திருக்கிறார்கள், நீர் வாழ் உயிரின ஆய்வாளர்கள். 'பிரான்ஹா' மீன்கள் சிறியவையாக இருந்தாலும் அவற்றின் மண்டை ஓடும், பற்களும் மிகவும் பலம் பொருந்தியவை. குறிப்பாக பற்கள் மரங்களை அறுக்க உதவும் ரம்பம் போல் கூர்மையாக காணப்படுவதுடன், வாயை மூடும் போது மேற்பர்களும் கீழ்ப்பர்களும் மிக கச்சிதமாக பொருந்தும்படி அமைந்துள்ளன. அதனால் இதன் வாயில் சிக்கிய எந்த பொருளும் அவ்வளவு எளிதாக தப்ப முடியாது.

இரண்டாவதாக, இந்த மீன்கள் தனியாக இறை தேடப்போவதில்லை. இந்த மீனுக்கு மிகச்சிறந்த மோப்ப சக்தி உண்டு. அது வசிக்கும் தண்ணீரில் இறங்கும் எந்த பிராணியையும் சில நொடிக்குள் மோப்பம் பிடித்து விடும். அடுத்த சில நிமிடங்களில் படு வேகமாக நீந்தி இரையை பிடித்து விடும். இவற்றுக்கு குதிரை, மான், மாடுகள் போன்ற விலங்குகள் இரையாக கிடைக்காவிட்டால் மற்ற இன மீன்களை சாப்பிடத் தொடங்கி விடும்.

அதேநேரம், 'பிரான்ஹா' மீன்கள் இருக்கும் நதியில் அமேசான் நதி ஒர கிராமங்களில் வசிக்கும் மக்கள் நீந்துகிறார்கள் . அவர்கள் இந்த மீனை கண்டு பயப்படுவதில்லை என்கிறார்கள். என்னதான் 'பிரான்ஹா' மீன்கள் பெரிய கொலைகார மீன்களாக இருந்தாலும் அவையும் மனிதனின் அடுப்பில் உணவாக வந்து தான் சேர்கின்றன. தென் அமெரிக்க பழங்குடியுனர் 'பிரான்ஹா' மீன்களை ஆற்றுக்குள் இறங்காமல் லாவகமாக பிடித்து விடுகிறார்கள். அதாவது, மயக்கமூட்டும் ஒரு செடியின் சாற்றை நதி நீரில் கலந்து விடுகிறார்கள். இந்த சாற்றின் நெடியால் மயக்கமடைந்து நீரில் மிதக்கும் 'பிரான்ஹா' மீன்களை எடுத்து வந்து குழம்பு வைத்து விடுகிறார்கள். இந்த மீனின் பற்களை அம்புக்கு முனைகளால கட்டுகிறார்கள். எவ்வளவு பெரிய 'பிரான்ஹா'வும் மனிதனிடம் மாட்டினால் கடைசியில் அதன் முடிவு அதோ கதிதான்.