Friday, November 21, 2014

உலகின் விசித்திரங்கள் நிறைந்த சாலைகள்

உலகின் விசித்திரங்கள் நிறைந்த சாலைகள்


சமதள சாலைகள், மலைப்பாங்கான கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலைகள் போன்றவை நமக்கு பரிட்சயம். ஆனால், உலகின் சில சாலைகள் வித்தியாசமும், விசித்திரமும் நிறைந்ததாக இருக்கின்றன. வண்டியை எடுத்தோமா, போக வேண்டிய இடத்துக்கு நேரத்துக்கு போய் சேர்ந்தோமா என்றிருக்கும் நமக்கு இந்த சாலைகள் நிச்சயம் புதுமையாகவே தோன்றும்.

அதிலும், படத்தில் காணும் சில சாலைகள் புதுமையான அனுபவத்தையும், சில சாலைகள் த்ரில்லை தரும் விதத்திலும் இருக்கின்றன. அதுபோன்று, ஆயுளில் ஒருமுறையாவது இந்த சாலையில் செல்ல வேண்டும் என்று தோன்ற வைக்கும் சில சாலைகளின் படங்கள் மற்றும் தகவல்களை இப்பதிவில்  காணலாம்.



சாலையின் குறுக்கே விமான ஓடுதளம்

ரயில் வரும்போது கேட் போடுவது போல ஸ்பெயினில் இருக்கும் இந்த சாலையின் குறுக்கே விமான ஓடுதளம் இருக்கிறது. எனவே, விமானங்கள் ஏறும்போதும், இறங்கும்போதும் 10 நிமிடங்கள் கேட் போட்டு விடுகின்றனர். விமானம் ஒன்று கடக்கும்போது சிக்னலில் காத்து கிடக்கும் வாகனங்களை படத்தில் காணலாம்.

ளை விழுங்கும் சாலை

மழை நேரத்தில் சாலை ஓரத்தில் சேறு இருந்தாலே நாம் வண்டியை முன்கூட்டியே நிறுத்தி கடப்பது வழக்கம். ஆனால், ரஷ்யாவில் ஓடும் லேனா ஆற்றின் கிழக்கு கரை ஓரத்தை ஒட்டி செல்லும் இந்த நெடுஞ்சாலையில் மழை பெய்து விட்டால் அவ்வளவுதான். அந்த சாலையில் ஆளை விழுங்கும் அளவுக்கு சேறாக மாறிவிடும். . 800 மைல் நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலையில் ஒரு முறை சென்று வருவதே நரகத்துக்கு சென்று திரும்புவது போலத்தான். ஆனால், குளிர்காலத்தில் வெப்பநிலை -40 டிகிரியாக இருக்கும்போது இந்த சாலையில் மண் கெட்டியாகி பயன்பாட்டுக்கு சிறந்ததாக மாறிவிடும். மணிக்கு 70 கிமீ வேகத்தில் பயணம் செய்யலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். திடீரென வந்த மழையால் சேறாகி கிடக்கும் சாலையில் தத்தளிக்கும் வாகனங்களை படத்தில் காணலாம்.

பாகிஸ்தான்-சீனாவின் உறவுப் பாலம்

தரைவழியாக இரு நாடுகளையும் இணைக்க ஒரு வழியை தேடின பாகிஸ்தானும், சீனாவும். அப்போது அவர்களுக்கு கிடைத்த வழிதான் காரகோரம் தொடர்ச்சி மலைகள். உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த சர்வதேச சாலை இதுதான். 15,500 அடி உயரத்தில் அமைத்துள்ள இந்த சாலையில் ஆக்சிஜன் அளவு மிக குறைவு என்பதுடன்,  பனி சிறுத்தைகளின் அட்டகாசம் அதிகம்.

குகைச் சாலை

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் உருவாக்கிய குகை வழிச்சாலையைத்தான் படத்தில் காண்கிறீர்கள். 1977ம் ஆண்டு மலையை குடைந்து அருகிலுள்ள முக்கிய நகரத்துடன் தங்கள் கிராமத்தை இணைக்கும் வகையில் இந்த குகை வழிச்சாலையை அமைத்தனர். இந்த சாலையை அமைக்கும்போது ஏராளமான கிராமவாசிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உலகின் ஆபத்தான சாலைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

ட்டிடத்திற்குள் செல்லும் சாலை

ஜப்பானிலுள்ள ஒசாகா நகரத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் சாலையைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். ஒசாகா நகர் வளர்ச்சி குழுமம் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டமிட்டபோது வழியில் இந்த பிரம்மாண்ட கட்டிடம் இருந்தது. கேட் டவர் இந்த கட்டிடத்தை இடிக்க அதன் உரிமையாளர் மறுத்துவிட்டார். எனவே, கட்டிடத்தின் உள் பகுதி வழியாக சாலையை அமைத்துவிட்டனர்.

டலுக்குள் புகுந்த பாலம்

தரையில் அமைக்கப்பட்ட சாலைகளை இதுவரை பார்த்தீர்கள். இப்போது அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் இருக்கும் கடல்வழிப் பாலத்தைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா. 12 மைல் நீளத்திற்கு கடலில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலத்தின் இடையில் 2 மைல் நீளம் கடலுக்குள் சுரங்கம் அமைத்து அமைக்கப்பட்டிருக்கிறது. ஏன் தெரியுமா?. கடலில் பாலம் கட்டுவதற்கு அமெரிக்க கடற்படை எதிர்ப்பு தெரிவித்தது. இந்த பாலத்தை அமைத்தால் தங்களது கடற்படை கப்பல்கள் செல்ல இயலாது என முட்டுக்கட்டை போட்டனர். இதையடுத்து, 2 மைல் நீளத்திற்கு கடலுக்குள் சுரங்கப் பாதையாக அமைக்கப்பட்டது.

பாம்பன் பாலம்

சரி, வரிசையாக சொன்ன எல்லா சாலைகளும் அயல்நாடுகளில் இருப்பதால் செல்வது பெரும்பாலானோருக்கு சாத்தியம் இல்லைதான். நம்மூரில் இதுபோன்றே வித்தியாசமான பாலங்கள் மற்றும் த்ரில் நிறைந்த சாலைகள் இல்லையா என்று கேட்பது புரிகிறது. ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் ரயில் பாலமும், அதையொட்டி வாகனங்கள் செல்வதற்கான பிரம்மாண்ட பாலமும் நம்மூரின் ஒண்டர்தான். ஆம், பாக் நீரிணையில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலம் 2.3 கிமீ நீளம் கொண்டது. மொத்தம் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்த ரயில் பாலம் 1914ல் திறக்கப்பட்டது. உலகிலேயே அதிக துரு பிடிக்கும் இரண்டாமிடமான ராமேஸ்வரத்த்தில் 100 ஆண்டுகளை நெருங்கியும் இந்தரயில் பாலம் காலத்தை வென்று நிற்கிறது. இதற்கு அருகே அமைந்திருக்கும் தரைவழி இணைப்புப் பாலம் 1988ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கப்பட்டது.

ணாலி டூ லே

உலகின் மிகவும் ஆபத்தான சாலைகளில் ஒன்றுதான் மணாலியில் இருந்து லே செல்லும் நெடுஞ்சாலை. சவால் நிறைந்த பயண விரும்பிகளுக்கு ஏற்ற இந்த சாலை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மத்தியில் இருந்து அக்டோபர் மாதம் வரை குறிப்பிட்ட காலம் மட்டுமே திறக்கப்பட்டிருக்கிறது இந்த சாலை.

கிரேட் ரான் கட்ச்

முடிவில்லா தொலைவுடன் வெள்ளை மணலில் பரந்து விரிந்து கிடக்கும் கிரேட் ரான் கட்ச் பாலைவனத்தில் பைக் ரைடிங் செல்லும் அனுபவத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தோலாவிராவிற்கு செல்லும்சாலையை பிடித்தால் புதுமையான அதேசமயம் திரில்லான அனுபவத்துக்கு கியாரண்டி. குறிப்பிட்ட தூரம் சென்று 360 கோணத்தில் பார்த்தால் வெறும் வெள்ளை மணலே தெரியும். திக்கு தெரியா தேசத்தில் ஓர் பயணம் என்ற தலைப்பில் ஒரு அனுபவத் தொடரை எழுதலாம். டிசம்பர்-ஜனவரியில் செல்வது சிறந்தது.

செலா கணவாய்

அருணாச்சல பிரதேச மாநிலம், செலா கணவாய் சாலை உலகின் இரண்டாவது மிகப்பெரிய உயரமான சாலை. கடல் மட்டத்திலிருந்து 13,800 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சாலை தவாங் பகுதியை நாட்டின் பிற பகுதியுடன் இணைக்கிறது.

யநாடு-ஊட்டி

பச்சை கம்பளம் விரிக்கப்பட்ட பச்சை பசேலன இருக்கும் மலைகளுக்கு இடையில் பதுங்கி செல்லும்  வயநாடு-ஊட்டி சாலையில் டிரைவிங் செய்வது ஒரு த்ரில்லான அனுபவமாக இருக்கும். அக்டோபர் முதல் மே வரையிலான காலத்தில் செல்வது சிறந்தது.

THANKS TO
ONE IN DIA

உங்களோட 'பள்ளிப் பருவ' போட்டோவைப் பார்க்கனுமா.. இங்க போங்க.. அப்டியே 'ஷாக்' ஆயிடுவீங்க!

உங்களோட 'பள்ளிப் பருவ' போட்டோவைப் பார்க்கனுமா.. இங்க போங்க.. அப்டியே 'ஷாக்' ஆயிடுவீங்க!

டெல்லி: பள்ளிப் பருவத்தை யார்தான் மறக்க முடியும்.. அதுவும் பள்ளிப் பருவத்தில் நாம் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இப்போது பார்க்க நேர்ந்தால் சிரிப்பு பொத்துக் கொண்டு வரும். அவ்வளவு காமெடியாக இருப்போம்.

சிலரிடம் பள்ளிப் பருவத்தில் எடுத்த புகைப்படங்கள் இருக்காது. மிஸ் செய்திருப்போம் அல்லது சேதமாகிப் போயிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்குகாகவே ஒரு 'அபாரமான' இணையதளம் வந்துள்ளது. 

இந்த இணையதளத்திற்குப் போய் பார்த்தால், தேடினால் உங்களது பள்ளிப் பருவ புகைப்படமும், 'உங்களது' புகைப்படமும் அப்படியே கையில் கிடைக்கும்.

கேட்கவே ஆச்சரியமாக உள்ளது இல்லையா. ஆனால் உண்மை.. மெய்யாலுமே உண்மை!

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். 
http://worldschoolphotographs.com/pages/wsp/info.php 

<<இங்கே>> சுட்டவும்...

என்ற இந்த இணையதளத்திற்குப் போங்க...

அங்கு போய் உங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுங்க.. கொஞ்ச நேரம் காத்திருங்க.. எஸ்.. இப்போது உங்களது 'பள்ளிக் கூடத் தோழர்களுடன்' நீங்கள் இருக்கும் 'குரூப்' போட்டோ வந்திருக்கும்.. பாருங்க.. சந்தோஷமா சிரிங்க...! 

எப்பூடி..."ஷாக்" ஆயிட்டீங்களா!


உங்கள் மொபைல் அடிக்கடி Hang ஆகுதா ? அப்போ இதை படிங்க!


 உங்கள் மொபைல் அடிக்கடி Hang ஆகுதா ? அப்போ இதை படிங்க!  





நாம் அனைவரும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும்  Android Osஐ நமது மொபைல்களில்  உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் இதை நாம் அனைவரும் உபயோகிக்க காரணம்  என்ன தெரியுமா 
கூகிள் நிறுவனம் இதை இலவசமாக வெளியிட்டதாலதான் பல மொபைல் நிறுவனங்கள் இதனை தன்னுடைய மாடல்களில் உட்படுத்தி மிகவும் குறைந்த விலையில் உலகச் சந்தைகளில்  விற்பனைக்கு கொண்டு வந்தார்கள் மிகக்குறைந்த விலை என்பதால் மக்களிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது 

அது எல்லாம் சரி என்றாவது இதனை நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? கூகிள் ஏன் இப்பேர்பட்ட இயங்கு தளத்தை (O S)ஐ இலவசமாக வெளியிட வேண்டும்?

பதில் மிகவும் சுலபம் 
அதில் நிறைய தவறுகள் இருக்கும் ஒரே காரணத்தினால்தான்  அவைகளில் முதன்மை வகிப்பது Mobile Hanging . . . . 
இதை சோதனை செய்து அதிலுள்ள அனைத்து தவறுகளையும் திருத்திய பின் இந்த Android Os இலவசமாக கிடைக்காது என்பதே யாரும் எதிர்ப்பார்த்திடாத   உண்மை 
அதற்காண சோதனையாளர்கள்தான் நாம் நம்மை வைத்து இவர்கள் இதனுடைய குறைகளை கண்டறிந்து அதை திறுத்தம் செய்வதற்காக பலபேர் கொண்ட குழுக்களை நியமித்திருக்கிறார்கள் அவர்கள் இதனுடைய குறைகளை  திருத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் 
ஆனாலும் இதை உபயோகிக்கும் நபர்கள் நாலுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிரார்கள் இந்த OS வேண்டாம் என்று விலகி  இருந்த Nokiaவும் தற்பொழுது இதை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது ஏனென்றால் பல பல புதிய applicationகள் Android மொபைல்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன



சரி நாம் வந்த விசயத்தை கவனிக்கலாம் நமது மொபைல்களில்
Hang ஆவதை எப்படி சரி செய்வது ?
அதை முழுமையாக சரிசெய்ய முடியாது ஆனால் அதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் அதற்கான தீர்வுதான் இந்த பதிப்பு 
நாம் மொபைல் வாங்கிய புதிதில் அது Hang ஆவதில்லை அதில் நாம் பல Applicationகளை நிறுவிய பின்னர்தான் அதனுடைய வேகத்தில்  கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றம் ஏற்படுகிறது அப்படியென்றால் Applicationகளை எல்லாம் அழித்து விடவேண்டுமா என்று நினைக்க வேண்டாம் அதை அழிப்பதினால் உங்களது போனின் வேகம் கூடப்போவது இல்லை அதனுடைய உபயோகத்தை நிறுத்த வேண்டும் 
அதாவது சில பேர் எனது மொபைலில் நிரைய இடம் இல்லை ஆதலால்  Applicationகளை   Memory cardல்தான் வைத்துள்ளேன் இருந்தாலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்ன செய்ய என கேட்பார்கள் 
அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள் 
இது எனது போனில் இருக்கும் 41.26MB அளவுள்ள ஒரு Application இதை நான் இப்பொழுது மெமரிகார்டிற்கு Move செய்ய போகிறேன்


இந்த படத்தில் நீங்கல் கான்பது நான் மெமரி கார்டிற்கு அதை Move செய்தபின் இதனுடைய அளவின் விவரப்பட்டியல் 
Total அதே 41.26Mb 
USB storage app என்பது மெமரி கார்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட fileகளின் அளவு 35.56MB 
சரி app 4.90MB என்று ஒரு பட்டியல் உள்ளதே அது என்ன அதுதான்  உங்களது போன் மெமரி  என்னதான் நாம் அனைத்து Applicationகளையும் மெமரி கார்டிற்க்கு Move செய்தாலும் அந்த Applicationனின் சில முக்கிய fileகள் மெமரி கார்டிற்க்கு மூவ் ஆவது இல்லை அது நமது போனிலேயே தங்கி விடுகிறது இதுதான் இந்த இடப்பற்றாக்குறைக்கு காரணம் 


  • சில பேர் கேட்பீர்கள் அதாவது என்னுடைய போனில் நிரைய  இடம் இருக்கிறது மெமரி கார்டிலும் அதிக இடம் இருக்கிறது ஆனாலும் மொபைல் Hang ஆகிறது அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள் 



இது Settings>app >running பகுதியில் எனது மொபைலில் காண்பிக்கப்படும் Ram மெமரியின் உபயோக அளவு 
என்னுடைய Ram memoryன் அளவு 512Mb 
அதின் உபயோக அளவு 432மMb 
அதில் காலியான இடம் வெரும் 5 mb
இதுதான் நாம் இப்பொழுது கவனிக்க வேண்டியது
  நமது போன் வேகமாக இயங்க போன் மெமரியோ external memoryயோ freeஆக இருப்பதால்  கிடையாது முழுக்க முழுக்க Ram மெமரியின்அளவில் அதிக இடம் இருக்க வேண்டும் 
நீங்கள் உங்களது போனில் Settings>app >running என்ற பகுதிக்கு செல்லுங்கள் அங்கு உங்கள் அனுமதி இல்லாமல் இயங்க கூடிய அனைத்து Applicationகளையும் Force Stop 

கொடுத்து நிறுத்தி விடுங்கள் நாம் அவ்வாறு செய்வதினால் மட்டுமே Ram memoryன் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் இப்பொழுது என்னுடைய போனின் ram memoryன் அளவை பாருங்கள் எவ்வளவு இடம் Freeயாக உள்ளது என்று

  • சரி இதை செய்து முடித்ததும் அடுத்து நாம் செய்ய வேண்டியது அதில் குறிப்பிட்டிருக்கும் data 


அது அனைத்து Applicationகளிலும் நம் உபயோகத்தை பொருத்து இருக்கும் அதை ஒரு முறை clear செய்து விடுங்கள் 

  • பிறகு நமது போனில் இருக்கும் 3D மற்றும் ANIMATION WALLPAPERகளை நிறுத்தி விடுங்கள்
  • HOME SCREEN இருக்கும் அதிக APPLICATION SHORTCUT களை அழித்து விடுங்கள் 
  •  history, call logs, messages போன்றவற்றை அதிகம் மொபைலில் தேக்கி வைக்காதீர்கள்
மேற்கண்ட அனைத்தையும் நீங்கள் கடைபிடிப்பதினால் உங்களது போன் வேகமாக இயங்குவதை உங்களால் உணர முடியும் 
Posted: 01 May 2014 04:50 AM PDT


ஹாய் எல்லோருக்கும்

நாம் இன்று பார்க்க இருக்கும் பதிவு வீடியோ, ஆடியோ, போடோஸ்'களை Convert செய்ய உதவும் மென்பொருள் பற்றி ஒரு சின்ன கண்ணோடம்.

இதுக்கு Format Factory என்னும் மென்பொருள் தான் மிகவும் வேகமாகவும் மற்றும் சிறந்த முறையிலும் Convert செய்ய கூடிய மென்பொருளாக காணப்படுகிறது அது பற்றி பாப்போம்


DOWNLOAD HERE

இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிய பின்னர் அதனை Open செய்தல் இவ்வாறு வரும் அதன் பின்னர்  


அதன் பின்னர் உங்களுக்கு எந்த வித்தில் கன்வெர்ட் செய்ய வேண்டும் என்பதை அருகில் உள்ளதை கொடுத்து கொவெர்ட் சேது கொள்ளுங்கள் 

முதலில் 

கொடுத்த பின்னர் இவ்வாறு வரும் அதன் பின்னர் Add File கொடுத்து உங்களுடைய கோப்பினை அப்டேட் செய்து கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் Output கொடுத்து உங்களுக்கு தேவையான விதத்தில் தயார்செய்து கொள்ளுங்கள் 



அதன் பின்னர் Start Button கொடுத்தால் சரி 

நன்றி  : ஆயிரம் அறிவோம்!

mobile information..
 
********************************************


மொபைல் போன் வரலாறு ....




 
********************************************

MOBILE தொலைந்து விட்டதா POLICE STATION செல்ல தேவையில்லை


 
********************************************

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?



********************************************

மொபைலுக்கு ரீ சார்ஜ் செய்ய* போகிறீர்களா?


 
********************************************

மிரட்டும் மொபைல் போன்கள்


 ******************************************** 

Friday, November 14, 2014

மெட்ராஸ் ஐ - க்கு சித்த மருந்து

மெட்ராஸ் ஐ நோய் காரணம் முதன்முதலாக சென்னையில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் இதற்கு மெட்ராஸ் ஐ னு பெயர் வச்சிட்டாங்க. 1918-ல் சென்னையில் ஒரு புதுவிதமான கண்நோய் வேகமாகப் பரவியது. அந்த நோய்க்கான காரணத்தை சென்னை மருத்துவமனையில் ஆராய்ந்து, அதற்கு மூல காரணமாக இருப்பது ‘அடிநோ’ வைரஸ் எனும் கிருமி என கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் முதலில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதால், அதற்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று பெயரிடப்பட்டது.

இந்த மெட்ராஸ் ஐ பல வழிகளில் பரவக்கூடியது. பேக்டீரியா மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ இன்னும் பல வழிகள் இருக்கு.
மெட்ராஸ் ஐ பெரும்பாலும் இரண்டு முதல் ஐந்து நாட்களில் தானாகவே எதுவும் செய்யாமலும் குணமாகிவிடும். இதற்கென பெரிய சிகிச்சைகள் எதுவும் தேவை இல்லை.
கருப்பு கண்ணாடி போடுவதால் பிறருக்கு பரவாது என்பது தவறு . கண்ணாடி போடுவதால் அதிகபடியான சூரிய வெளிச்சம் மூலம் வரும் எரிச்சலை மட்டுமே தடுக்க மூடியும் .
ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியை மற்றவர் பயன் படுத்த கூடாது. கண்களை கசக்க கூடாது .

தும்மல் , இருமல் மூலமும் இந்த வைரஸ் பரவும் , எனவே வாயில் துணி வைத்து இருமவும் .
கண்களை குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவவும் ,ஆதற்கு முன்பு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவவும் .
நேருக்கு நேர் பார்த்தால் வராது . ஆனால் எதிர்ப்பு சக்தி குறைவனவர்களுக்கும் , குழந்தைகளுக்கும் அருகில் வந்தாலே மூச்சு காற்று மூலம் தொற்று ஏற்படும்.
இதற்கு சித்த மருத்துவத்தில் என்ன இருக்கு?
நந்தியாவட்டை பூ சுமார் 10 எண்ணிக்கை எடுத்து கண்ணை மூடிக்கொண்டு இமை மீது வைத்து கட்டி இரவில் படுத்து விட வேண்டும் ஒரே நாள் போதும் காலையில் பார்த்தல் மெட்ராஸ் ஐ போய்விட்டு இருக்கும்.
மற்றொரு மூலிகை
நேத்திர பூண்டு என்றும் நேத்திர மூலிகை என்றும் அழைக்க படுகிறது. இந்த இலைகளை பறித்து தண்ணீரில் அலம்பி துணியால் ஈரத்தை துடைத்து விட்டு சன்னமாக கத்தரித்து ஒரு செப்பு (செம்பு )பாத்திரத்தில் போட்டு மூலிகை முங்கும் அளவுக்கு சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி வெயிலில் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வைக்கவும்.இதற்கு சூரிய புடம் என்று பெயர். வெயில் காலங்களில் மூலிகை பறித்து சூரிய புடமிட்டால் எண்ணெய் நிறம் மாறிவிடும். சுத்தனமான காடா துணியில் வடிகட்ட இலைகள் மேலே நின்று எண்ணை மட்டும் கீழே இறங்கி விடும்.
இதை உபயோகிக்கும் முறை : இந்த எண்ணெயைக் கண்கள் ஒவ்வொன்றிலும்,2,3,சொட்டுக்கள் காலை ,மாலை இருவேளைகள் விட்டுக்கொண்டு வர ஆரம்ப கண் படலம் குணமாகும் .கண்களில் உண்டான 96 நோய்களும் குணமாகும்.கண் படலம் வந்த பிறகுதான் போட வேண்டுமென்பதில்லை.எல்லா வயதினருக்கும் உபயோகிக்கலாம்.கண் படலம் வராமல் தடுக்கும்.
இதை மெட்ராஸ் ஐ க்கு பயன் படுத்த ஓரிரு நாளில் குணம் தெரியும்.
அடுத்து மற்றொரு முறை ஒரு சுத்தி செய்த படிகாரம் ஒரு கிராம் 200 மிலி தண்ணீரில் நன்றாக கரையும் வரை கலக்கி விடவும். அப்படி படிகாரம் கலங்கிய தண்ணீரை 2,3,சொட்டுக்கள் காலை ,மாலை இருவேளைகள் விட்டுக்கொண்டு வர ஆரம்ப கண் படலம் குணமாகும். இந்த மெட்ராஸ் ஐ அப்படியே ஒரே நாளில் ஓடிவிடும்.

மூலிகை நன்றாக உள்ளது மெட்ராஸ் ஐ வந்த பிறகு சரி செய்யலாம். வராமல் இருக்க என்ன செய்வது ?
மேற்சொன்ன சொன்ன வழிகளை பயன் படுத்தி முன் எச்சரிக்கையுடன் இருக்கலாம் அல்லது மருந்துகளை முதலிலேயே கண்களில் விட்டு கொள்ளலாம் பக்க விளைவுகள் ஏதும் இல்லை.
மற்றொரு எளிய வழி வெறும் பஞ்சை தண்ணீரில் நினைத்து இரவில் கண்கள் மேல் கட்டிக்கொண்டு படுத்துவிட வேண்டியது தான். இது மெட்ராஸ் ஐ வராமல் இருக்க தடுக்கும் வழி
மேலும் பயணிப்போம் . . .

Friday, November 7, 2014

ஓவியர் லியொனார்டோ டா வின்சி

ஓவியர் லியொனார்டோ டா வின்சி



கடின உழைப்பு, திறமை ஆகியவற்றால் வறுமையையும் வென்றுவாழ்வில் முன்னேறிய வர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம். இதோ அந்தப் பட்டியலில் இன்னொருவர்...

உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தை வறுமையில் வாடிய போதுதான் வரைந்தார் டாவின்சி.

ஓவியம் உள்பட பல்வேறு துறைகளிலும் திறமை பெற்று விளங்கிய லியானர்டோ டாவின்சி, 1452-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி ‘ஆன்கியானோ’ என்ற நகரத்தில் பிறந்தார். தந்தை பெயர் பியரோ டாவின்சி. தாயார், காத்தரினா.

டாவின்சி இடக்கையால் எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். பொதுவாக அனைவரும் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக எழுதுவது வழக்கம். ஆனால் டாவின்சி வலப்பக்கமாக ஆரம்பித்து இடது பக்கமாக எழுதுவார். அவரது எழுத்துக்களை முகம் பார்க்கும் கண்ணாடியின் மூலம்தான் படிக்க முடியும்.

டாவின்சியின் அப்பாவும் அம்மாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். இதனால் தாயின் அன்பும், அரவணைப்பும் இல்லாமல் தந்தையுடன் வளர்ந்து வந்தார் டாவின்சி.

சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் திறமையானவராக விளங்கினார் டாவின்சி. தன்னைக் கவர்ந்த இயற்கைக் காட்சிகளை ஓவியமாக வரையத் தொடங்கினார்.

மகனுக்கு ஓவியத்தில் இருக்கும் ஆர்வத்தைக் கண்ட அப்பா, வெர்ரோச்சியோ என்பவர் நடத்தி வந்த ஓவியக்கூடத்தில் டாவின்சியை சேர்த்தார்.

ஓவியக்கூடத்தில் சேர்ந்த டாவின்சி, ஓவியம் மட்டுமில்லாமல் சிற்பம், இசை போன்ற பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். இதனால் அந்த ஓவியப்பள்ளி வாழ்க்கை டாவின்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மற்ற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டினார். டாவின்சிக்கு குதிரைச் சவாரி மிகவும் பிடித்த விளையாட்டு.

கலைக்கூடத்தில் பயிற்சி முடித்த பின் மனித வாழ்க்கையின் யதார்த்த நிலையை ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்தார். மருத்துவமனைக்குச் சென்று நோய்வாய்ப்பட்டிருக்கும் மனிதர்களைக் கண்டு அவர்களின் நிலையை ஓவியமாகத் தீட்டினார்.

மிலன் நகரத்தில் ஆட்சி செய்து வந்த லுடோவிகோ ஸ்பார்ஸாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார் டாவின்சி. ஸ்பார்ஸா கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தான். ஆல்பஸ் மலையில் பாதுகாப்பு அரண்களை அமைக்கும் பணிகளைக் கவனிக்க சென்றார் டாவின்சி. மலையின் இயற்கை அழகு அவரை மிகவும் கவர்ந்தது. அங்கே கண்ட காட்சிகளை வரைந்தார்.

அந்த ஓவியம் மதக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், அதை ஃபிரான்ஸ் நாட்டு மன்னர் அதிக விலை கொடுத்து வாங்கி தன் அரண்மனையில் காட்சிக்கு வைத்தார்.


இதைத் தொடர்ந்து ஏசுநாதர் வாழ்க்கையில் முக்கிய நிகழ்ச்சியான ‘கடைசி இரவு விருந்து’ எனும் நிகழ்ச்சியை கன்னிமாடத்தின் சுவரில் வரைந்தார். சுவரின் உறுதியற்ற தன்மையின் காரணமாக அந்த ஓவியம் பழுதடைந்தது.

டாவின்சி இயற்கையை மட்டுமல்லாமல், விலங்குகளையும் பறவைகளையும் மிகவும் நேசித்தார். சந்தைக்குச் சென்று கூண்டில் அடைத்து விற்கப்படும் பறவைகளை விலைக்கு வாங்குவார். கூண்டைத் திறந்து உற்சாகமாக பறவைகளை எல்லாம் வெளியே பறக்க விடுவார். இதை வழக்கமாகவே செய்து வந்தார். இதை சந்தையில் இருப்பவர்கள் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள்.

மிலன் நகர் மீது ஃபிரெஞ்சுக்காரர்கள் படையெடுத்தபோது ஸ்பார்ஸாவையும் அவரது ஆட்களையும் நகரத்தை விட்டு விரட்டினார்கள். டாவின்சியும் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
வெனிஸ் மற்றும் ரோம் நகரில் சில காலம் தங்கி இருந்தார். மிலனில் மீண்டும் ஸ்பார்ஸாவின் ஆட்சி வந்ததால் டாவின்சியும் திரும்பினார்.
The Baptism of Christ - Leonardo da Vinci

டாவின்சிக்கு சம்பளமாகக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுக்காமல் நாட்களைக் கடத்தி வந்தான் ஸ்பார்ஸா. இதனால் அன்றாட செலவுக்குக்கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார் டாவின்சி.

தன் செலவுகளுக்காக பல விதமான ஓவியங்களை வரைந்து விற்பனை செய்தார். இந்த காலகட்டங்களில் அவர் வரைந்த பல ஓவியங்களில், ‘மோனாலிசா’ குறிப்பிடத்தக்க வகையில் அற்புதமான படைப்பாக அமைந்தது.

இது உலகப் புகழ் பெற்றது. மோனாலிசா ஓவியத்தை வரைய டாவின்சிக்கு ஆறு ஆண்டுகள் பிடித்தது. அற்புதமாகக் காட்சியளித்த அந்த ஓவியத்தை ஃபிரெஞ்சு மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் 12 ஆயிரம் பிராங்குகள் கொடுத்து வாங்கினார்.

அறிவியல் துறையிலும் ஆர்வம் காட்டிய டாவின்சி, நூல் நூற்கும் இயந்திரம், திருகாணி செய்யப்பயன்படும் கருவி, மண் தூக்கும் கருவி போன்றவற்றுக்கான வரைபடங்களை வரைந்தார். மேலும் விண்மீன்களைப் பற்றி முதன்முதலில் கண்டுபிடித்த பெருமையும் அவரையே சேரும்.

பறக்கும் எந்திரங்கள், பாராசூட், ராணுவ டாங்கிகள் போன்றவற்றுக்கான மாதிரிப் படங்களையும் முதலில் வரைந்தார்.

 பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொருட்களை பல வருடங்களுக்கு முன்பே வரைபடமாக டாவின்சி வரைந்து இருப்பது வியப்புக்கு உரியது. பல துறைகளிலும் சிறந்து விளங்கிய டாவின்சி 1519-ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதி இறந்தார்.

லியானர்டோ டாவின்சியின் புகழை, காலத்தை வென்று நிலைத்து நிற்கும் ‘மோனலிசா’ ஓவியம் இன்று மட்டுமின்றி என்றும் பிரதிபலித்துக்கொண்டே இருக்கும்.

some related article

இரகசிய சமுதாயம் - தொடர்-7 [த டாவின்ஸி கோட்]

Wednesday, November 5, 2014

மனிதனுக்கு பயப்படும் காட்டுவாசிகள்

மனிதனுக்கு பயப்படும்காட்டுவாசிகள்

காட்டுக்குள் நூறு சதவீதம்
இயற்கையோடு இயற்கையாக வாழும்
நூற்றுக்கனக்கான பழங்குடியினர்
வசிக்கின்றார்கள் குகைகளில்
வசித்து விலங்குகளை வேட்டையாடும்
பழங்குடி மக்கள் பலர் இன்னமும் நாகரிக
மனிதர்களோடு உறவாட
விரும்புவது இல்லை.


அந்தமான் நிக்கோபர்
தீவுகளில் சென்டினல் என்ற தீவில் வசிக்கும்
சென்டினலீஸ் பழங்குடி மக்கள் இதுவரைக்கும்
தங்கள் அருகில் யாரையும் நெருங்கவிட்டதே இல்லை.

மேலும் இந்த மனிதர்களுக்கு நாகரீகத்தையும்
நவின உலகத்தையும் கற்றுத்தருகிறோம்
என்று வெளியில் இருந்து காட்டுக்குள்
செல்பவர்காளாலும்
இவர்களுக்கு ஆபத்து உண்டு. காட்டில்
ஏற்படும் எவ்வளவோ கொடூரமான வியாதிகளில்
பிழைத்துக் கொள்ளும் இவர்களால் நாகரீக
மனிதர்களால் ஏற்படும் சாதாரண நோய்களைக்கூட
தாங்கிக் கொள்ள முடிவதில்லை.உதாரணமாக நாகரீக
மனிதன் மூலம் பரவிய ஜலதோஷத்தை கூட
தாங்கமுடியாமல் காட்டு மனிதர்களின் உயிர்
பறிபோய் விடுகிறது.

இதனாலே நாகரீக மனிதர்கள்
அவர்களுக்கு ஆகாதவர்களாக இருக்கிறார்கள்.
பிரேசில் அமேசான் நதிக்கு அருகே வசிக்கும்
பழங்குடியின மக்களை புகைப்படம் எடுக்க
ஹெலிகாப்டரில் சென்றார், புனாய் என்ற
போட்டோ கிராபர். அந்த மக்களின்
வசிப்பிடத்திற்கு மேல் ஹெலிக்காப்டர்
பறந்தபோது அதை ஏதோ பெரிய ஆபத்தான
பறவை என்று நினைத்த காட்டுவாசிகள்
அதை நோக்கி சரசரவென அம்புகளை விட்டனர்.

அதையும் தவற விடாமல் போட்டோ எடுத்து வந்த
புனே பத்திரிகைகளில் வெளியிட,
அந்தபகுதி மிகவும் பிரபலமானது.
இப்போது பத்திரிக்கையாளர்கள்
அந்தப்பகுதியை நோக்கி படையெடுத்துக்
கொண்டிருக்கிறார்கள். காட்டு விலங்குகளிடம்
இருந்து தப்பிக்கத் தெரிந்த
இந்தகாட்டுவாசிகளுக்கு நவீன மனிதர்களிடம்
இருந்து தப்பிக்க தெரியவில்லை.

காங்கோ காடுகளின்
குகைகளில் வசிக்கும் பிக்மி என்ற
பழங்குடியினருக்கு வேட்டை தான் பிரதான தொழில்.
வேட்டையை தவிர அவர்களுக்கு வேறு எந்த தொழிலும்
தெரியாது.

ஆனால் மற்ற ஆதிவாசிக் கூட்டத்துக்கும்
இவர்களுக்கும் சண்டை ஏற்படும்
சூழ்நிலை வந்தால், உடனடியாக முதல் வேலையாக
வெள்ளைக்கொடி காட்டி சமதானமாகி விடுவார்கள்.
இந்த மத்திய ஆப்பிரிக்க நாட்டுக்கு போய்வர
பிரான்சில்
இருந்து இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மட்டும்
ஒரே ஒரு விமானம் உள்ளது. காங்கோ காடு பிரான்சைத்
தவிர உலகத்தில் வேறு எந்த நாட்டுடனும்
எந்தவித தொடர்பும் வைத்துக் கொளள வில்லை.
இப்படி இருந்தும் கூட இந்த
அப்பாவி காட்டுவாசிகளான பிக்மியை காங்கோ வீரர்கள்
வேட்டையாடி உண்பார்களாம். காங்கோ இன மக்களின்
வேட்டையாடும் விலங்குகள் பட்டியலில் இந்த
பிக்மி இனமும் இடம் பெற்றிருக்கிறது.