Monday, September 22, 2014

எச்சரிக்கை பன்றி இறைச்சி தடை ஏன் ?

எச்சரிக்கை பன்றி இறைச்சி தடை ஏன் ?


பன்றி இறைச்சியை உண்பதால், 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது ஒரு அறிவியல் ரீதியான உண்மை.அதில் முக்கிய‌மான சில வ‌கைககளை ம‌ட்டும் இங்கே பார்ப்போம்.


ம‌னித‌ உட‌லில் ஏற்கென‌வே ப‌ல்வ‌கை புழுஇன‌ங்க‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ விருந்தாளி போல‌ குடியிருந்து வ‌ருகின்ற‌ன என்று ப‌ள்ளி பாட‌ புத்தக‌ங்களிலேயே நாம் ப‌டித்திருக்கிறோம்.சில‌ புழுக்க‌ள் ந‌ம் உட‌ல் செரிமான‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுகின்றன‌ என்ப‌தும் நாம‌றிந்த‌ செய்தியே...
"டேனியா சோலிய‌ம்" Taenia solium (pork tapeworm) என்ற‌வொரு புழு, ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் ந‌ம் உண‌வுக்குழ‌லின் அடிபாகத்தில் வாட‌கையின்றி குடியேறி விடுகிறது.

"Taenia solium (pork tapeworm). The adult lives in the small intestine of man that is the definitive host. Segments of the worm pass through the anus and release large numbers of eggs that can survive for long periods outside of the body. When ingested by pigs, the eggs hatch and each releases an oncosphere that migrates through the intestinal wall and blood vessels to reach striated muscle where encystment occurs. Even when well adequately cooked pig meat is eaten by man, excystment occurs in the small intestine and an adult cestode (worm) develops. If the eggs are released into the upper intestine of man (e.g. through regurgitation) they can invade the host setting up a potentially dangerous larval infection known as cysticercosis in muscle and other sites."

இந்த டேனியா சோலியம் ,அதே பகுதியில் (Ova) தன் முட்டைகளை இடுகிறது. இந்த முட்டைகள் தான் மிகவும் ஆபத்தானவை.இவை மனிதனின் இரத்த நாளங்களில் பயணிப்பதால் அதன் மூலம் எல்லா உறுப்புகளையும் சென்றடைந்து விடுகின்றன.மனித உடல் உறுப்புகளில் எந்த பகுதிக்கு பரவினாலும் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுமாம்.இத‌ய‌ம்,மூளை,க‌ண்,நுரையீர‌ல் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் இந்த டேனியா சோலிய‌த்தின் முட்டைக‌ள் கைவ‌ரிசை காட்டுகின்ற‌ன.
டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்றே இன்னுமொரு புழு உயிரினம் "ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ்" (Trichura Tichurasis) பன்றி மாமிசத்தின் மூலம் தான் மனித உடலில் பரவுகிறது.டேனியா சோலியமும் இந்த ட்ரிசுராவும் ஒரே மாதிரியான குணமுள்ள உறவினர்கள் தான்.

ஆனால் இந்த புழுக்களின் முட்டைகள், பன்றி இறைச்சியை நன்கு சமைத்தப்பதால் இறந்து விடுகின்றன என்பது எல்லோர் மத்தியிலும் இருக்கும் "பொதுவான தவறான கருத்து".அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஒரு ஆய்வில், ட்ரிசுராஸிஸ் ஆல் பாதிக்கப் பட்ட 24 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர்.இதில் 22 பேர் பன்றி மாமிசத்தை நன்கு சமைத்து உண்டவர்கள் தான்.ஆகவே, இந்த புழுக்களின் முட்டையின் சாதாரண் நீரின் (சமையலின் போது) கொதிநிலையில் இறப்பதில்லை.


இதுமட்டுமின்றி பன்றியின் இறைச்சியில் உள்ள மிதமிஞ்சிய கொழுப்பும், ஹார்ட் அட்டாக்,ஹைபர்டென்ஷன் போன்ற‌ பல ஆபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன.அமெரிக்கா,ஐரோப்பிய கண்டங்களில் வாழும் பாதி விழுக்காடுபேர் "ஹைபர்டென்ஷன்"ஆல் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற செய்தி ஆச்சரியப்படுவதிற்கில்லை.
நோய்களுக்கான காரணியாக மட்டுமின்றி, அது ஒரு சுகாதாரமற்ற விலங்கினமாகவே சுற்றி வருகிறது.பண்டைய காலங்களில், நாகரீக லெட்ரீன்கள் இல்லாத காரணங்களால் மனித கழிவை சுத்தம் செய்வதற்காகவே பன்றிகள் பயன்படுத்தப் பட்டன.

ஆனால் இப்போதெல்லாம் மேலை நாடுக‌ளில் ந‌ல்ல‌ சுகாதாரமான சூழ்நிலைகளில் தானே ப‌ன்றிக‌ள் வ‌ள‌ர்க்க‌ப் ப‌டுகின்றன? என்று நீங்க‌ள் கேட்க‌லாம்.சுகாதார‌மான‌ சூழ்நிலைக‌ளில் வ‌ள‌ர்க்க‌ப் பட்டாலும் எல்லா ப‌ன்றிக‌ளையும் ஒரே இட‌த்தில் வைப்ப‌தால், அவை த‌ம் இன‌த்தின் க‌ழிவுக‌ளையே உண்டு ம‌கிழ்கின்ற‌ன.ஆக‌, இது ஒரு சுகாதார‌ சீர்கேட்டிற்கும் வ‌ழிகோலும் என்ப‌தில் ஐய‌மில்லை.

பல்வேறு நூற்றாண்டுகளுக்கு முன் அருளப் பெற்ற இறை வேதங்களில் பன்றி இறைச்சி தடை செய்யப் பட்டுள்ளதன் நோக்கம் நம்மைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.திருக்குர்-ஆனில் நான்கு இடங்களில் இக்கருத்து வலியுறுத்தப் பட்டுள்ளது.இஸ்லாம் மட்டுமின்றி, கிறிஸ்துவர்களின் வேதமாகிய பைபிளிலும் பன்றி இறைச்சியைப் புசிப்பது தடுக்கப் பட்டுள்ளது.

திருக்குர்-ஆன் வசனங்கள் 2:173, 5:3, 6:145 மற்றும் 16:115.
பைபிள் [ Book of Deuteronomy 14:8] Leviticus 11:7-8.

இந்த பதிவுக்கு தொடர்புடைய பதிவு ..

இதை ஷேர் செய்யுங்கள் இன்னும் நிறைய பேரை சென்றடையட்டும்.

சில எச்சரிக்கை பதிவுகள் 

 


எச்சரிக்கை நீங்கள் பயன் படுத்தும் பொருள்களில் ஹரமான (பன்றி) கொழுப்பு இருக்கலாம்.

 

http://rahmanfayed.blogspot.in/2013/01/blog-post_2277.html

 

ஓர் எச்சரிக்கை பரோட்டா பிரியர்களுக்கு



எச்சரிக்கை நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?


எச்சரிக்கை நீங்கள் பின்பாக்கெட்டில் பர்ஸ் வைப்பவரா ??


உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?

Friday, September 19, 2014

மொபைல் பேங்கிங் மோசடி.

மொபைல் பேங்கிங் மோசடி.





பேசுவதற்கும் எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும் நாம் அதிகம் பயன்படுத்தும் செல்போன், இப்போது பணப் பரிமாற்றம் செய்வதற்கும் பெரிய அளவில் பயன்படுகிறது.

இன்டர்நெட் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும்போதுதான் நம் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களைத் திருடினார்கள் என்றால், இப்போது செல்போன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போதும் நம் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல் களைத் திருடி, நம் கணக்கில் இருக்கும் பணம் அனைத்தையும் கொள்ளையடிக்கத்தான் செய்கிறார்கள். இருந்த இடத்தில் இருந்தபடி பணத்தை அனுப்ப நினைத்தால், நம் பணத்தை இழக்க வேண்டிய துர்பாக்கியம் ஏற்படுகிறது.


இதெப்படி சாத்தியம்? என் செல்போனில் இருக்கும் தகவல்கள் என்னைத் தவிர வேறு யாருக்குத் தெரியப்போகிறது என அப்பாவியாகக் கேட்கும் பலருக்கும் காத்திருக்கிறது பல அதிர்ச்சித் தகவல்கள்.

நீங்கள் உங்கள் செல்போனில் பதிவு செய்யும் உங்களது வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள், உங்கள் ரகசிய எண்கள் போன்றவை மிகச் சுலபமாகத் திருடுபோவதற்கு வாய்ப்புள்ளது.

எப்படி இந்தத் திருட்டு நடக்கும், இந்தத் திருட்டில் நீங்கள் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இன்ஃபிசெக் (InfySEC) நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி வினோத் செந்திலிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

 அவர்.‘‘ஃபைனான்ஷியல் நிறுவனங்களில் சைபர் பாதுகாப்பு என்பது சற்று குறைவாகத்தான் உள்ளது. இந்த நிறுவனங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தங்கள் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் திருடப்படுகிறது என்பதை அறிந்த நிறுவனங்கள்; மற்றொன்று, கணக்குகள் திருடப்படுவது குறித்து தெரியாமலே இயங்கும் நிறுவனங்கள்.

இதில் அதிகம் பாதிக்கப்படுவது வங்கிகள்தான். காரணம், ஹேக்கர்கள் எனப்படும் தகவல் திருடுபவர்கள் வங்கியின் கேட்வே எனப்படும் பேமன்ட் வழிக்குள் நுழைந்து தகவல் களைத் திருடிவிடுகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுக்க 40 மில்லியன் கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது என்பது அதிர்ச்சியான தகவல்.

இதை ஹேக்கர்கள் எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்தால் அசந்து போவீர்கள். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஆப்ஸ் போன்றோ அல்லது இணையதளம் போன்றோ ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அதை உங்கள் எண்ணுக்கு அனுப்புவார் கள். உங்கள் வங்கிதான் அதை அனுப்பி இருக்கிறது என்று நினைத்து, நீங்களும் அதை பதிவிறக்கம் செய்து உங்கள் வங்கிக் கணக்கு தொடர்பான அத்தனை தகவல்களையும் அதில் பதிவீர்கள்.

இப்படி நீங்கள் பதிவு செய்யும் தகவல்கள் அனைத்தையும் வேறு ஓர் இடத்திலிருந்து கண்காணிப்பார்கள் ஹேக்கர்கள். உங்கள் வங்கிக் கணக்கு பற்றிய தகவல்கள் கிடைத்த அடுத்த சில நொடிகளில் உங்கள் கணக்கில் உள்ள பணம் அத்தனையையும் வழித் தெடுத்துவிடுவார்கள்.

இன்னும் சிலர், நான் சரியான வங்கி இணையதளத்தில்தான் லாக்-இன் செய்தேன் என்று சொல்வார்கள். கணினி அமைப்பில் உள்ள ASCII கோடுகளைப் பயன்படுத்தி, அதே பெயரில் வேறு இணையதளத்தை உங்கள் வங்கியின் அமைப்பிலேயே உருவாக்க வாய்ப்புள்ளது என்பதால் நீங்கள் எளிதாக ஏமாந்து போவதற்கு நிறையவே சாத்தியம் உள்ளது. சென்ற ஆண்டில் மட்டும் 3.5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு ஃபைனான்ஷியல் ஃப்ராடுகள் நடந்துள்ளன.

இதுமாதிரியான திருட்டுகளைத் தடுக்க எங்களைப் போன்ற சைபர் செக்யூரிட்டி அமைப்புகள் நிறுவனங்களின் நெட்வொர்க்கை முழுமையாக ஆராய்ந்து அதில் எந்த இடத்தில் ஹேக்கர்கள் தாக்க வழி உள்ளது என்பதை ஆய்வு செய்து, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து தருகிறோம்’’ என்றார்.

‘‘மொபைல் பேங்கிங் செய்பவர்கள் தங்களது செல்போனில் வங்கிக்கான ஆப்ஸை தரவிறக்கம் செய்துதான் இதனைப் பயன்படுத்த வேண்டும். இங்குதான் சிக்கல் வரத் தொடங்குகிறது. தவறான, வங்கி அல்லாத சேவை வழங்குவோரிடமிருந்து வந்த ஆப்ஸை நீங்கள் தரவிறக்கம் செய்திருந்தால், உங்களுக்கு ஆபத்துதான்.

உங்கள் வங்கி அளிக்கும் ஆப்ஸை பயன்படுத்தி, அதில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களைப் பதிந்தால், அந்தத் தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வங்கி உத்தரவாதம் அளிக்கும்.

நம் பணத்தை சுருட்டும் மோசடி ஆப்ஸ்களைத் தவிர்ப்பதற்கு சில எளிய வழிகள் உள்ளன.

பணப் பரிவர்த்தனைக்கான ஆப்ஸ்களை நீங்கள் டவுன்லோடு செய்யும்போது வங்கிகளின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் இருந்து டவுன்லோடு செய்யுங்கள்.

வங்கிகளை அணுகினால் அவர்களே உங்கள் செல்போன் நம்பருக்கு ஓர் இணையதள முகவரியை அனுப்பி டவுன்லோடு செய்ய வழிவகைச் செய்வார்கள். அதுதான் பாதுகாப்பானதும்கூட.

உங்கள் கணக்கின் தகவல்களை உங்கள் செல்போனில் உள்ள ஆப்ஸ்களில் மட்டும் பயன்படுத்துங்கள். மற்றவர் போனில் அவசரத்துக்குப் பயன்படுத்துகிறேன் என்று உங்கள் தகவல்களைப் பதிவு செய்யாதீர்கள்.

வங்கிகள் தரும் ஆப்ஸில் பயன்படுத்தி னாலும் பரிமாற்றத்துக்காக வழங்கும் OTP (One Time Password) எனும் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்டை யாருடனும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதும் நல்லது’’ என்றனர்.

நேரம் வீணாகும் என்று நினைத்து மோசடி ஆப்ஸ்களில் சிக்கி பணத்தை இழக்காமல், சரியான ஆப்ஸ்களைத் தரவிறக்கம் செய்து, பணத்தைப் பத்திரமாக பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்.

நன்றி...
Thariq Abulaila
mobile information..
 
********************************************

மொபைல் போன் வரலாறு ....




 
********************************************

MOBILE தொலைந்து விட்டதா POLICE STATION செல்ல தேவையில்லை


 
********************************************

மொபைலுக்கு ரீ சார்ஜ் செய்ய* போகிறீர்களா?


 
********************************************

மிரட்டும் மொபைல் போன்கள்



 ********************************************



 ********************************************
 ********************************************

Tuesday, September 16, 2014

உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள்


‪#‎NESTLE‬ கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.


‪#‎FAIR‬ & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.


‪#‎VICKS‬ பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 

நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.


‪#‎LIFE‬ BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?


‪#‎COKE‬ மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான்.


‪#‎வெளிநாட்டு‬ கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.


‪#‎ஹிந்தி‬ சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.


#‎PIZZA‬ பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.
# கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
# Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)
# நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!
● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.
● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.
தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!!
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!
+++++++++++++++++++++++++++++++
பொது நலம் கருதி வெளியிடுவோர் :-உங்கள் கிராமத்து இளைஞன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எச்சரிக்கை நீங்கள் பயன் படுத்தும் பொருள்களில் ஹரமான (பன்றி) கொழுப்பு இருக்கலாம்


உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்

Thursday, September 11, 2014

எச்சரிக்கை நீங்கள் ஐஸ்க்ரீம் பிரியர்களா?


எச்சரிக்கை நீங்கள் ஐஸ்க்ரீம் பிரியர்களா?



எந்த Brand-ன்னு பார்த்து வாங்கி சாப்பிடுங்க!! இல்லேன்னா சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிற கதைதான்!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்க்ரீமை விரும்பி சுவைக்காதவர்கள் இருக்க முடியாது. ஐஸ்க்ரீம்களில் ஏராளமான வகைள் உண்டு. கப் ஐஸ், கோன் ஐஸ், குல்ஃபி ஐஸ், பார் ஐஸ் இப்படி வகை வகையாக பல வடிவங்களில் பல சுவைகளில் கிடைக்கின்றன.

பொதுவாக ஐஸ்க்ரீம் தயாரிக்கும் நிறுவனங்கள் பால் சார்ந்த பொருட்களை யும் சர்க்கரையும் நறுமணத்தை தரக்கூடிய திரவங்களையும் சில வககைளில் உலர் பழங்களையும் முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற விதைகளையும் கொண்டு தயாரிக்கின்றார் கள். இதைத்தான் ஐஸ்க்ரீம் என்றுசொல்லப் படுகின்றது. இதனை தயாரிக்க கூடுதல் செலவாகின்றது.

ஆனால் ஒரு சில நிறுவனங்கள் இதற்கு மாற்றாக தாவர எண்ணைய், பாமாயில், க்ளுக்கோஸ் மற்றும் இதர வாசனை திரவியங்களை கொண்டு ஐஸ்க்ரீம்கள் தயரிக்கின்றனர். இந்த ஐஸ்க்ரீம்கள் frozen desert என்று சொல்லப்படுகின்றது. இவைகள் ஐஸ்க்ரீம்கள் இல்லை என்றாலும் இதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் 'ஐஸ்க்ரீம்' என்றே விளம்பரப்படுத்தி வந்தன. இந்த வகையான ஐஸ்க்ரீம்களை தயாரிக்க குறைந்த செலவே ஆகின்றது. ஆனால் விற்பனை செய்யப்படும் போது பாலில் தயாரிக்கும் நிறுவனங்களின் விலையிலே இந்த தயாரிப்பு களும் விற்கப்படுகின்றன.

அந்த வகையில் மிகப்பிரபலமான Kwality Walls 'ice cream' எனும் பெயரில் 'frozen desert' வகையான க்ரீம்களை தயாரித்து ஐஸ்க்ரீம் என்று கடந்த பல வருடங்களாக மிகப் பெரிய அளவில் விற்பனை செய்து தனது தயாரிப்பினை மக்கள் மனதில் பதிய வைத்துள்ளது. இந்த நிறுவனத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் Hindustan Unilever நிறுவனம் வாங்கிய பிறகுதான் பிரச்சனை ஆரம்பித்தது.

Gujarath cooperative milk federation சார்பில் தயாரித்து விற்பனை செய்யப் படும் அமுல் ஐஸ்க்ரீமானது எல்லோராலும் நன்கு அறிமுகமான ஒன்று. இந்த நிறுவனம் தனது தயாரிப்பினை பால் மற்றும் இதர பொருட்களை கொண்டே தயாரிக்கின்றது. 


இந்த நிறுவனம் சார்பில் Hindustan Unilever மீது தொடரப்பட்ட வழக்கில் kwality wall ice cream என்ற தயாரிப்பில் இந்த நிறுவனம் தயாரிப்பது ஐஸ்க்ரீமே அல்ல என்றும் அது தனது தயாரிப்பில் frozen desert என்று மட்டுமே குறிப்பிடவேண்டும் என்றும் ஐஸ்க்ரீம் என்ற பெயர் இடம் பெறக்கூடாது என்றும் தொடரப்பட்ட வழக்கில் உண்மை இருப்பதை உறுதி செய்த நீதிமன்றம் இனி அந்த Brand-டில் ஐஸ்க்ரீம் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று உத்திரவிட்டது. நீதிமன்ற உத்திரவினை ஏற்ற நிறுவனம் தன்னுடைய விளம்பரத்திலும் தனது தயாரிப்பிலும் ஐஸ்க்ரீம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டது. 

அதோடல்லாமல்அமுல் நிறுவனம்இந்த புகாரினை Advertising Standard Council of India விற்கும் அனுப்பியது. அதனடிப்படையில் தற்போது அனைத்து விளம்பரங்களிலும் தனது தயாரிப்பிலும் kwality wall என்று மட்டும் போடப் படுகின்றது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு kwaility என்றால் அது இன்னமும் ஐஸ்க்ரீம் என்றே தெரிந்துள்ளது அதனால் அதன் விற்பனை கொஞ்சம் கூட சரியவே இல்லை.

Frozen desert -க்கும் ice cream -க்கும் என்ன வேறுபாடு? 

ஏன் frozen desert தயாரிப்பினை அதிகம் உண்ணக் கூடாது என்று ஆராய்ந் தால் frozen desert என்று சொல்லக் கூடிய அந்த வகையான ஐஸ்க்ரீம்களில் கெட்ட கொழுப்பு சத்தானது அதிகமாக உள்ளது. கால்சியம் இந்த frozen desert ஐஸ்க்ரீம் வகைகளில் ஒரு சதவீம் கூட இல்லை.

கீழே உள்ள தகவல் என்ன சொல்கின்றது என்று பாருங்கள். 

ICE CREAM:

For every 100 gm of serving
Energy - 217 KCal
Protein - 3.5 gm
Carbs - 21.5
Fat - 13%
Calcium - 176 mg
Frozen Dessert
Energy - 200 KCal
Fat - 10.5
Carbs - 23
Protein - 4
Saturated fat - 5.8
Trans-fat - traces (இதுவரை இது எவ்வளவு சதவீதம் என்று சொல்லப்படவில்லை)

இந்த Frozen Dessert கூறப்பட்டுள்ள ஐஸ்க்ரீம் வகைகளில் saturated
fat மற்றும் trans fat ஆகிய இரண்டும் உடல் நலத்திற்கு தீமை விளை விக்கக் கூடியவை. தொடர்ந்தாற் போல் இந்த வகையான Frozen Dessert ஐஸ்க்ரீம்களை குழந்தைகள் முதல் பெரியவர் வரை வாங்கி உண்பதால் அதிக கொழுப்புசத்து காரணமாக உடல் எடை அதிகரித்தல் கொலஸ்ட்ரால் கூடுதல் இதன் காரணமாக இரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்மந்தமான நோய்கள் நிச்சயமாக ஏற்படும் என்று மருத்துவர்களால் சொல்லப்படுகின்றது.

எனவே ஐஸ்க்ரீம் வாங்கி உண்ணும் போது அது பாலில் தயாரிக்கப் பட்டதா அல்லது frozen desert ஆ என்பதை பார்த்து வாங்கி பயன் படுத்தவும். இல்லை என்றால் சொந்த பணத்தை கொடுத்து சூனியம் வைத்துக் கொள்ளும் நிலைதான் உருவாகும்.குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு இந்த வகையைான frozen desert மிகவும் ஆபத்தானது.

some related articles

எச்சரிக்கை ஓட்ஸ் என்னும் அரக்கன்..

எச்சரிக்கை நீங்கள் பின்பாக்கெட்டில் பர்ஸ் வைப்பவரா ??

எச்சரிக்கை நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?