Wednesday, July 31, 2013

சுவனப்பிரியன் : "இந்து மதத்துக்கு அனுப்பப் பட்ட இறைத் தூதர் யார்?"

சுவனப்பிரியன் : "இந்து மதத்துக்கு அனுப்பப் பட்ட இறைத் தூதர் யார்?"





ஒரே இறைவனையும் அவனால் அனுப்பப் பட்ட முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாமிலிருந்து கடைசி தூதரான முகமது நபி வரையுள்ள அனைத்து தூதர்களையும் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால் இந்துக்கள் எந்த இறை தூதர்களையும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் இறைத் தூதர்கள் மூலமாக அருளப்பட்ட வேதங்களை வைத்திருக்கின்றார்கள். மனிதர்களைப் பிரிக்கும் சாதி அமைப்புகளை உண்டாக்கும் வர்ணாசிரமத் தத்துவம் பிற்பாடு மனிதக் கரங்களால் ஏற்றப் பட்டிருக்க வேண்டும். வர்ணாசிரமக் கருத்துக்களை நீக்கி விட்டுப் பார்த்தால் குர.ஆன், பைபிள், தோரா, ரிக், யஜீர்,அதர்வண வேதங்கள் அனைத்தின் கருத்துக்களும் பெரும்பாலும் ஒத்துப் போவதைப் பார்க்கிறோம்.

யூத வேதமான தோரா அல்லது பென்ட்டாஸ் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு யூதரிடம் கேட்டால் அவர் மோஸஸ் மூலமாக அருளப் பட்டது என்று கூறி விடுவார்.

கிறித்தவ வேதமான சுவிஷேஷம் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு கிறித்தவரைக் கேட்டால் இயேசு கிறிஸ்து மூலமாக அருளப் பட்டது என்று கூறி விடுவார்.

இஸ்லாமிய வேதமான திருக் குர்ஆன் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு முஸ்லிமைக் கேட்டால் முகமது நபி என்று உடன் கூறி விடுவார்.

இதே கேள்வியை பழம் பெரும் வேதங்களுக்குச் சொந்தக் காரர்களான இந்துக்களிடம் ரிக், யஜீர், சாம, அதர்வண வேதங்கள் யார் மூலமாக அருளப் பட்டது என்று கேட்டால் அவர்களால் பதில் சொல்ல முடியாது.
வியாசர்

இந்து வேதங்களை பகுத்து தொகுத்தவர் வியாசர் என்று சிலர் சொல்வர். வியாசர் எனும் சமஸ்கிரத சொல்லின் பொருளே தொகுப்பாளர் என்பதாகும். ஆனால் இங்கு தொகுப்பாளரைக் கேட்கவில்லை. வேதம் யார் மூலமாக அருளப் பட்டது என்பதுதான் கேள்வி. இதே போல் தான் இஸ்லாமியரின் வேத நூலான குர்ஆனை முகமது நபிக்கு பிறகு புத்தக வடிவில் தொகுத்தவர் உஸ்மான் என்று வரலாற்று ஆதாரங்களின் மூலம் அறிகிறோம்.

வேதம் என்றால் அது கடவுளின் வார்த்தையாக இருக்க வேண்டும். எனவேதான் அதற்கு நாம் உயர்ந்த மதிப்பைக் கொடுக்கிறோம். மதம் என்று ஒன்று இருந்தால் அதற்கு வேதம் என்று ஒன்று இருக்க வேண்டும். அந்த வேதம் யார் மூலமாக அருளப் பட்டது என்ற தெளிவு இருந்தாக வேண்டும். சாதாரணமாக அனுப்புனரோ பெறுநரோ இல்லாத ஒரு கடிதம் எவ்வளவு தான் உயர்ந்த நடையில் இருந்தாலும் மக்களிடம் எடுபடுவதில்லை. பழம் பெருமை வாய்ந்த இந்து சமுதாயம் நேர் வழிக் காட்ட வந்த வேதம் யாரால் அருளப் பட்டது என்ற தகவலை தொலைத்து விட்டு நிற்கிறது.

'ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு நேர் வழி காட்டியுண்டு' -(13 : 7) என்று குர்ஆன் கூறுகிறது.

அப்படியானால் இந்து சமுதாயத்திற்கு வந்த இறைத் தூதர் யாராக இருக்க முடியும்?

'ஏ அக்னீ !நியூஹ் அவர் தூதர் என்று ஒப்புக் கொள்கிறேன்.'

1 : 13,14 - ரிக் வேதம்

நோவாவுடைய பெயர் ரிக் வேதத்தில் 51 இடங்களிலும், யஜீர் வேதத்தில் இரண்டு இடங்களிலும், சாம வேதத்தில் எட்டு இடங்களிலும், அதர்வண வேதத்தில் பதினான்கு இடத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது

ஆதாரம் வேத ஆராய்ச்சி தொகுப்பான”NOW OR NEVER” – written by Shames Navad

இதிலிருந்து இந்து சமூகத்துக்கு என்று வந்த தூதர்களில் வேதம் கொடுக்கப் பட்ட தூதர் நோவா என்று அறிய முடிகிறது.

இந்து வேதங்களில் எழுபத்தைந்து இடங்களில் தூதர் நோவாவுடைய குறிப்பு காணப்படுகிறது. இஸ்லாமியரின் வேதமான குர்ஆனில் முகமது நபியின் பெயர் வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே குறிப்பிடப் படுகிறது. ஆனால் முஸ்லிம்கள் முகமது நபியை இறைத் தூதர் என்று நம்புகிறார்கள். எழுபத்தைந்து இடங்களில் நோவாவின் குறிப்பை தங்கள் வேதங்களில் வைத்திருக்கும் இந்துக்களோ நோவாவை ஏற்க மறுக்கிறார்கள்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் குறிப்பிட்ட பிரதேசத்திற்கும் - குறிப்பிட்ட இனத்தினருக்கும் மட்டுமே உரியவர்கள் ஆவார்கள். ஆப்ரஹாம், இஸ்மாயீல் போன்றோர்கள் அரபு இனத்தவருக்காகவும், மோஸஸ், தாவூது, ஏசு போன்றோர் இஸ்ரவேல் இனத்தவருக்காகவும் நோவா அவர்கள் ஜலப் பிரளயத்திற்கு முன்பும், ஜலப் பிரளயத்திற்கு பின்பு சில காலமும் அன்றைய ஆதிக்கத்தின் சந்ததிகள் அனைவருக்கும் பொதுவான தூதராக இருந்தார். பிற் காலத்தில் அவர்கள் குமாரர்கள் மூலமாக சந்ததி பிரிந்த போது ஆரிய சமுதாயத்தினருக்கு மட்டுமான தூதராக நோவா இருந்திருக்கிறார்.

'நோவாவுக்கும் அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல முஹம்மதே உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம்.'

4 : 163 - குர்ஆன்

இதன் மூலம் நோவாவுக்கு அருளப் பட்ட வேதத்தைப் போலவே அதற்கு பின் வந்த தூதர்களுக்கும் வேதம் அருளப்பட்டதாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நோவாவுக்கு கொடுக்கப் பட்ட வேதத்திற்கும் முகமது நபிக்கு கொடுக்கப் பட்ட வேதத்துக்கும் பல ஒற்றுமைகள் இருக்க வேண்டும் என்று தெளிவாகிறது. இந்த ஒற்றுமையைப் பற்றி 'இந்து மதம்போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்' என்ற தலைப்பில் முன்பே எழுதியிருக்கிறேன். அது அல்லாமல் மேலும் சில ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

1). புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே
1 : 1 - குர்ஆன்

புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
8 : 1 : 1 -ரிக் வேதம்

2). இறைவன் அளவற்ற அருளாளன் : நிகரற்ற அன்புடையோன்
1 : 2 - குர்ஆன்

அவன் அளவற்ற தயாள குணம் வாய்ந்தவன்
3 : 34 : 1 - ரிக் வேதம்

3). நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக
1 : 5

எங்கள் நன்மைக்கான நேர் வழியைக் காட்டு
40 : 16 - யஜுர் வேதம்.

4). நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
2 : 107 - குர்ஆன்

பரந்த வானங்களின் மீதும் பூமியின் மீதும் ஆட்சி அதிகாரமும் வல்லமையும் கொண்டவன் அவனே! அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.
1 : 100 : 1 - ரிக் வேதம்

5). கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.
2 : 115 - குர்ஆன்

அவன் எல்லா திசைகளிலும் இருக்கிறான்
10 :12 :14 - ரிக் வேதம்

கிழக்கிலும் மேற்கிலும் மேலிழும் கீழிலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்வுலகைப் படைத்தவன் இருக்கிறான்
10 : 36 : 14 - ரிக் வேதம்

இறைவனின் பார்வை எல்லா பக்கங்களிலும் இருக்கிறது. இறைவனின் முகம் எல்லா திசைகளிலும் இருக்கிறது.
10 : 81 : 3 - ரிக் வேதம்

6). அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்
25 : 2 - குர்ஆன்

பரமாத்மா எல்லாப் பொருட்களுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறார்.
7 : 19 : 1 - அதர்வண வேதம்

7). அவன் தான் இரவையும் பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்
25 : 62 - குர்ஆன்

இரவுகளும் பகல்களும் அவன் விதித்து அமைத்ததே
10 : 190 : 2 - ரிக் வேதம்

8). நீங்கள் களைப்பாறி அமைதி பெற அவனே இரவையும் காலக்கணக்கினை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
6 : 96 - குர்ஆன்

அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
10 : 190 : 3 - ரிக் வேதம்

9). யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே. பிந்தியவனும் அவனே. பகிரங்கமானவனும் அவனே. அந்தரங்கமானவனும் அவனே. மேலும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
57 : 3 - குர்ஆன்

ஏ பரமேஸ்வர்! நீ அந்தரங்கமானவனும், முந்தியவனும் நன்கறிந்தவனுமாவாய்.
1 : 31 : 2 - ரிக் வேதம்.

10). அல்லாஹ்வுடைய நடை முறையில் நீர் எவ்வித மாறுதலையும் காண மாட்டீர்.
48 : 23 - குர்ஆன்

அவன் நடைமுறையில் ஒன்று கூட மாற்றத்திற்கு உரியத அல்ல.
18 : 15 - அதர்வண வேதம்

11). அல்லாஹ்வுடைய வாக்குகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
10 : 64 - குர்ஆன்

இறைவனின் புனித வாக்குகளில் மாற்றங்களே இல்லை.
1 : 24 : 10 - ரிக் வேதம்

12). அல்லாஹ் அவன் மிகவும் பெரியவன், மிகவும் உயர்ந்தவன்
13 : 9 - குர்ஆன்

இறைவன் உண்மையில் மிகப் பெரியவன்
20 : 58 : 3 - அதர்வண வேதம்

மேற் கண்ட இரண்டு மார்க்கங்களின் வேதங்களின் கருத்துக்களின் ஒற்றுமையைப் பாருங்கள். ஒரு சில வார்த்தை வித்தியாசங்னளை தவிர்த்து பொருள் ஒன்றாக வருவதை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். பொருள் மட்டும் அல்லாது வசன நடையும் ஏறக்குறைய ஒன்றாக வருவதைப் பார்க்கிறோம்.

ஒரு விஷயத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக ஒரே சொற்றொடரை திரும்ப திரும்ப பயன்படுத்துவது இலக்கியத்தில் ஒரு மரபாகவே கடைபிடிக்கப் படுகிறது. இதே போன்ற சொற்றொடர்கள் குர்ஆனிலும், இந்து மத வேதங்களிலும் எங்கெல்லாம் வருகிறது என்பதை இனி பார்ப்போம்.


இறைவனே மிக அறிந்தவன்
அன்புடன்
தகவல் உதவிக்கு  நன்றி
சுவனப்பிரியன்.,
ஜாகிர் நாயக்,
அபூ ஆசியா, ..

GOOGLE images.

Monday, July 22, 2013

இந்து முன்னணியின் கந்துவட்டி கள்ளத்தொடர்பு கொலைகளும். முஸ்லிம்கள் மீதான பழிகளும்....

இந்து முன்னணியின் கந்துவட்டி கள்ளத்தொடர்பு கொலைகளும். முஸ்லிம்கள் மீதான பழிகளும்....

 

கடந்த ஓராண்டில் பாஜக மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் நடுரோட்டில் ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . இந்த கொலைகள் நடந்தவுடன் வழக்கம் போல ஊடகங்களும் RSS BJP இந்து முன்னணிகள முஸ்லிம்களின் மீது பழி போட்டு பஸ் எரிப்பு ,கடையடைப்பு நடத்தி அரசியல் ஆதாயம் அடைகிறது .

சில நாட்கள் கழித்து இந்த கொலைகள் தொடர்பான உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இந்த கொலை தொடர்பான கேவலமான பின்னணி தெரிய வரும்போது , இதனை பத்திரிக்கைகள் சிறிய செய்தியாக வெளியிடுகிறது .




கோயம்பேடு விட்டல் கொலை 27.4.2012 .

சென்னை விருகம்பாக்கம் சாய்நகரை சேர்ந்தவர் விட்டல் (35). இவர் 127-வது வட்ட பா.ஜனதா தலைவராக இருந்தார்.கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.27.4.2012 .அன்று இரவு கோயம்பேடு மார்க்கெட்டின் பின்புறம் கை துண்டிக்கப்பட்டு உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் விட்டல் பிணமாக கிடந்தார்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சுந்தரபாண்டியன் என்பவருக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை சுந்தரபாண்டியன் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அடிக்கடி விட்டல் சுந்தரபாண்டியன் வீட்டுக்கு சென்று வீட்டு பெண்களை ஆபாசமாக பேசியுள்ளான் .இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுந்தரபாண்டியன் அவரது அண்ணன் முருகன் மற்றும் நண்பர் கங்காதரன் ஆகியோர் சேர்ந்து விட்டலை வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் .


டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை 23.10.12 .

வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல டாக்டர் அரவிந்த் ரெட்டி (38). பாஜ மாநில மருத்துவர் அணி செயலாளராக இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதி பாஜ வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த மாதம் 24ம்இரவு 7.30 மணியளவில்,பைக்கில் வந்த 3 பேர் அரவிந்த் ரெட்டியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர் .

கொலை நடந்த இடத்தில் ஸ்பிரேயர் பாட்டிலில் தயார் செய்த நாட்டு வெடிகுண்டை போலீசார் பறிமுதல் செய்தனர் . உடனே முஸ்லிம் தீவிரவாதிகள்தான் இந்த கொலையை செய்ததாக பந்த் நடத்தினார்கள் .

விசாரணையில் பெண் விவகாரத்தால் கொலை நடந்தது தெரிய வந்தது .இந்த கொலைக்கான சதித்திட்டத்தை குண்டர் சட்டத்தின்கீழ் வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி வசூர் ராஜா தீட்டியுள்ளார் .
வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த தங்கராஜ் (26), பிச்சை பெருமாள் (28) மேலும், இந்த கொலையில் ஓல்டு டவுன் உதயா என்ற உதயகுமார் (28), சின்னா என்ற சந்திரன் (25), அரியூர் ராஜா (எ) ராஜ்குமார் (எ) எம்எல்ஏ ராஜா (32), சோளிங்கர் தரணி என்ற தரணிகுமார் (24) ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் .


நாகப்பட்டிணம் புகழேந்தி கொலை 5.7.12 .

நாகப்பட்டிணத்தில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்த புகழேந்தி (53),காலை நடைபயணம் சென்ற போது ஆட்டோவில் வந்த 4 மர்ம நபர்களால் வெட்டி படுகொலைச் செய்யப்பட்டார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியது :-
கடந்த 30 ஆண்டுகளாக இந்து மக்களுக்காக போராடி வந்தவர் புகழேந்தி. இவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததை எதிர்த்து போராடியவர் .இதனால் இந்த கொலை நடந்ததாக கூறினான் .

ஆனால் போலீஸ் விசாரணையில் .

கொலை செய்யப்பட்ட புகழேந்தி, கட்டப்பஞ்சாயத்து நில ஆக்கிரமிப்பு அடாவடி செயலில் ஈடுபடுவதும் , சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவர் வீட்டை அபகரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது . இவனால் பாதிக்கப்பட்ட முனீஸ்வரன் என்பவர் இந்த கொலையை செய்ததும் தெரியவந்தது . முனீஸ்வரன் சேலம் நீதி மன்றத்தில் சரணடைந்தார் .


பரமக்குடி முருகன் கொலை 19.3.13

பரமக்குடி. பாரதீய ஜனதா முன்னாள் கவுன்சிலரான முருகன்இவர் வாஜ்பாய் மன்ற தலைவராகவும் இருந்து வந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் பைப்வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணையில் 6 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பாக ராஜபாண்டி மனோகரன் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது .


வேலூர் வெள்ளையப்பன் கொலை .

இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வெள்ளையப்பன் சென்ற போது இந்த சம்பவம் நடந்தது.

வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் அருகே 4 பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர் .

இது தொடர்பாக ஜூலை 02,2013 வெளிவந்த தினமலர் செய்தியில் ''

வேலூர், புது பஸ்நிலையம் அருகே, இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன், 45, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். .. ......கொலை நடந்த இடத்தில், கறுப்பு நிற பை கண்டெடுக்கப்பட்டது. அந்த பையில், ஐந்து பைப் வெடிகுண்டுகள் இருந்தன. பேட்டரி இணைக்கப்பட்டிருந்த வெடி குண்டை, கொலைக்கு அல்லது தப்பி செல்லும் போது, பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். பைப் வெடிகுண்டுகள், தென்மாவட்டங்களில் பிரபலம் என்பதால், தென் மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படையினர், இதில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர். ''


ராமேஸ்வரம் குட்டநம்பு கொலை 7.7.13 ,

ராமேசுவரத்தை சேர்ந்தவர் குட்டநம்பு இந்து முன்னணி ஒன்றிய துணைத்தலைவராக இருந்து
வந்தார் .சம்பவத்தன்று மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் ரெயில்வே ரோடு பகுதியில் குடிபோதையில் குட்டநம்பு தகராறு செய்ததால் ஊர்மக்கள் கல்லால் அடித்து கொன்றது தெரியவந்தது .இது தொடர்பாக ராமச்சந்திரன் என்பவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர் .


தற்போது சேலத்தில் பிஜேபி பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட நிலையில் ,

''ஏற்கெனவே பிஜேபி இந்து முன்னணி பிரமுகர்கள் வேலூர் அரவிந்த் ரெட்டி ,கோயம்மேடு விட்டல் ,பரமக்குடி முருகன் , நாகை புகழேந்தி ,ராமேஸ்வரம் குட்டநம்பு , வேலூர் வெள்ளையப்பன் ஆகியோரை கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகளே ஆடிட்டர் ரமேசையும் கொலை செய்திருக்கிறார்கள் '' என மோடி முதல் ராமகோபால ஐயர் வரை கூறி திங்கள் கிழமை[
இன்று] தமிழகத்தில் கடையடைப்பு நடத்துகிறார்கள் ..

இப்படியாக இந்த பிஜேபி இந்து முன்னணிகள் குடிபோதை, கந்துவட்டி, கள்ளத்தொடர்பு, நில ஆக்கிரமிப்பு, போன்றவட்டில் ஈடுபட்டு பாதிகப்பட்டவனால், துரத்தி துரத்தி வெட்டி கொலை செய்யப்பட்டபோது, 

அந்த பழியை முஸ்லிம்கள் மீது போட்டு , பஸ் எரிப்பு கடையடைப்பு பந்த் நடத்தி அரசியல் ஆதாயம் அடைகின்றனர். .
 

 thanks to
அரேபிய சிறுத்தைகள்..
google images..
 

Monday, July 15, 2013

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!


1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும்.
கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது.

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது


ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.
கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள் :


1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it

தஜ்ஜால் வருகை

தஜ்ஜால் வருகை [Dajjal Arrivals]




தஜ்ஜால் வருகை


Narrated by Ubadah ibn as-Samit (radiAllahu anhu) that The Prophet (salAllahu alayhi wasalam) said,
“I have told you so much about the Dajjal (Anti-Christ) that I am afraid you may not understand. The Anti-Christ is short, hen-toed, woolly-haired, one-eyed, an eye-sightless, and neither protruding nor deep-seated. If you are confused about him, know that your Lord is not one-eyed. -[Abu-Dawud :4306]
 
Arrivals
 
Before download the videos, please read the notes which are given at the end of this page.         
Description on respective topics
Download Hereதலைப்புகள் பற்றிய சிறுகுறிப்பு
 IntroductionIntro அறிமுகம்
 Proof From The Holy QuranPart-1 திருக்குர்ஆனின் அத்தாட்சிகள
 Shocking Evidence Of The PharaohsPart-2 அதிர்ச்சியூட்டும் ஃபிர்அவ்னிய சாட்சிகள்
 Architecture And EnergyPart-3 கட்டிடக் கலையும் சக்தியும்
 The Battle Of Human EnergyPart-4 மனித சக்தியின் போராட்டம்
 Pharaohs Of TodayPart-5 இன்றைய நவீன ஃபிர்அவ்ன்கள்
 Structures Dedicated to AntichristPart-6 தஜ்ஜாலுக்காக அர்பணிக்கப்பட்டவைகள்
 Mind Control Feat. George CarlinPart-7 அறிவை கட்டுப்படுத்துதல்
 Children's Mind ControlPart-8 குழந்தைகளின் அறிவை கட்டுப்படுத்தல்
 Hashem's FilmsPart-9 சகோதரர் ஹிஷாமைப்பற்றி சிறுகுறிப்பு
 The New Worldly OrderPart-10 புதிய உலகிற்கான பிரகடனம்
 Musical SorceryPart-11 மதிமயக்கும் மந்திர இசைகள்
 Light Up The DarknessPart-12 இருளுக்கு ஒளியூட்டல்
 Lady In RedPart-13 சிவப்பு மங்கை
 HollywoodPart-14 ஹாலிவுட்
 Hollywood And The Promised LandPart-15 ஹாலிவுட்டும் வாக்களிக்கப்பட்ட பூமியும்
 The Media And IslamPart-16 ஊடகமும் முஸ்லிம்களும்
 The War On TerrorPart-17 தீவிரவாதத்திற்கெதிரான போர்
 Hypocrisy And DemocracyPart-18 நயவஞ்சகத்தனமும் ஜனநாயகமும்
 The UFO PhenomenaPart-19 யுஏப்ஓ தோற்றப்பாடு
 The UFO Phenomena (Continued)Part-20 யுஏப்ஓ தோற்றப்பாடு (தொடர்ச்சி)
 What Is Yet To ComePart-21 இனி வெளிவர இருப்பவைகள் என்ன?
 Our Satanic Pop CulturePart-22 சாத்தானிய பாப்இசை கலாச்சாரம்
 Materialism And The Battle WithinPart-23 பொருள்முதல்வாதமும் அத்தோடு நம்   போராட்டமும்
 Freedom UnpluggedPart-24 பறிக்கப்பட்ட சுதந்திரம்
 The Antichrist Dajjal Is HerePart-25 தஜ்ஜால் இங்கே இருக்கிறான்
 The Antichrist Dajjal Is here (Continued)Part-26 தஜ்ஜால் இங்கே இருக்கிறான் (தொடர்ச்சி)
 Why Leaders Practice SatanismPart-27 தலைவர்கள் ஷைத்தானிய கோட்பாட்டை  பின்பற்றுவதேன்?
 Why Leaders Practice Satanism (Continued)Part-28 தலைவர்கள் ஷைத்தானிய கோட்பாட்டை  பின்பற்றுவதேன்? (தொடர்ச்சி)
 The Truth About GodsPart-29 கடவுள்கள் பற்றிய உண்மைகள்
 The Checkered Floor And The GodsPart-30 சதுரங்க தளமும் கடவுள்களும்
 The Great DeceptionPart-31 மாபெரும் பித்தலாட்டம்
 The Most Valuabe TruthPart-32 விலை மதிப்பற்ற உண்மை
 The Choice Is YoursPart-33 இனி தேர்ந்தெடுப்பது உங்கள் கையில்
 The Infiltration Of ReligionPart-34 மதக்கோட்பாட்டில் ஊடுருவல்
 The Temple Of SolomonPart-35 சாலமோன் கோயில்
 The Story Of JesusPart-36 நபி ஈஸா (அலை) அவர்களின் சரிதை
 The Sun GodPart-37 சூரியக் கடவுள்
 The Story Of IslamPart-38 இஸ்லாத்தின் சரித்திரம்
 The Prophet's LineagePart-39 நபி(ஸல்) வழியைத் தொடர்ந்தோர்
 The Common GroundPart-40 பொதுவான அடிப்படைகள்
 The BloodlinesPart-41 இரத்த பந்தங்கள்
 The GatekeepersPart-42 வாயிற் காப்போன்
 The Symbolism Of 9-11Part-43 செப்டம்பர் 11 குறியீடுகள்
 The Significance Of The KaabaPart-44 இறையில்லம் கஃபாவின் முக்கியத்துவம்
 The Kaaba And The 9-11 RitualPart-45 புனித கஃபாவும் செப் 11 சடங்குகளும்
 The Complete HumanPart-46 முழுமையான மனிதன்
 The Free HumanPart-47 விடுவிக்கப்பட்ட மனிதன்
 The Arrival Of MahdiPart-48 மஹ்தி (அலை) வருகை
 The Arrival Of AntichristPart-49 தஜ்ஜாலின் வருகை
 The Arrival Of Jesus The MessiahPart-50 நபி ஈஸா (அலை) வருகை
 EndPart-51 முற்றும்
Important Notes:
  1. We have published these Arrival videos in our website due to its mammoth information which can wakeup our society against the satanic luciferian cults and their evil plans against the humanity, where most of our people unaware of it
  2. As per the current scenario of  Muslim Ummah, The global Muslim community has divided into 2 major sects i.e. Sunni and Shia. This satanic split has been done by the JEWS and the Luciferians; we strictly against those satanic concepts of Shiaism. Moreover, we have strongly believe that the foundation/basisfor Islam is the Teachings of Glorious Qur’an and authentic Ahadhees of our beloved Prophet Muhammed (SAL).
  3. In addition with the given background music in the video clips, if you find anything contradicting to Quran and Sunnah then  PLEASE   IGNORE ITCOMPLETELY.
  4. We are sincerely requesting to our respected viewers, Please take only optimistic things from these videos. For Example videos like #39, #48 , #49 are giving some baseless information while showing Imam's names and showing the imaginary depictions for both Prophet Esa (AL) and Imam Mahdhi (AL).
  5. We sincerely express our gratitude and deep sense of appreciation to Noreagaaa & Achernahr production team, for providing such eye opening episodes with brainstorming efforts.  May Allah bless them and guide them into right path.


this article is taken from
thanks to  ஜாஸிம் ஷரீஃப்,

Tuesday, July 2, 2013

ஜிஸ்யா வரியும் மன்னர் ஔரங்கஜேப்பும்..


 ஜிஸ்யா வரியும் மன்னர் ஔரங்கஜேப்பும்..

rahmanfayed : இந்தியாவை ஆண்ட மன்னர்களில், கூறிப்பாக ஆங்கிலேயர்களுக்கு முன் ஆண்ட இந்திய மன்னர்களில் அவதூறாக விமர்சிக்கபட்ட ஒரே மன்னர், ஔரங்கஜேப் மட்டும் தான்.,

நமது பள்ளி காலங்களில், ஔரங்கஜேப்பை இந்துகளின் விரோதியாக தான் பள்ளி ஆசிரியர்கள் விமர்சித்தனர், கூறிப்பாக கோயிலை இடித்தார்,ஜிஸ்யா வரி வித்தார் என்பது கூறிப்பிடடக்கது..

ஔரங்கஜேப் கோயிலை இடித்து உண்மை அல்ல என்பதை முந்தைய பதிவில் பார்த்து அறிந்து கொள்ள <<இங்கே>>  கிளிக் செய்யுங்கள்..

என் இந்துகளுக்கு ஔரங்கஜேப்பை ஜிஸ்யா வரி விதித்தார், என்பதை காண்பதற்கு முன்...
சில விஷயங்களை அறிந்து கொள்வோம்..
 
ஒரு அரசாங்கத்திற்கு வரி என்பது மிக முக்கியம், அதை கொண்டு நாட்டு மக்களுக்கு பல நல்ல திட்டங்களுக்கு செயல் படுத்த முடியும். அண்டை நாட்டிம் இருந்து பாதுகாக்க முடியும். நாட்டை முன்னேற்ற, அரசு சரியாக செயல் பட வரி அவசியம்..

நம் நாட்டை ஆண்ட பல மன்னர்கள், அதிகமான வரி விதித்தை, நடுநலையானவர்கள் மறந்துவிடுவார்கள்.

சில மன்னர் விதித்த அதிகமான வரியை துற்றாமல், பாராட்டியவர்கள். ஆனால் ஔரங்கஜேப்பை துற்றுவார்கள், காரணம் அவர் ஒரு முஸ்லிம் என்பதால்.
நம் தமிழகத்தை ஆண்ட தச்சை பெரிய கோயிலை கட்டிய சோழ மன்னன் உடையர் ஸ்ரீ ராஜ ராஜ சோழன் அருள் மொழி வர்மர் விதித்த கடுமையான வரியை நீங்கள் அறிவிர்களா?

விளையும் நிலத்துக்கு ஒரு வரி, தரிசு நிலத்துக்கு ஒரு வரி, வசிக்கும் வீடுக்கு ஒரு வரி, வியபாரத்துக்கு ஒரு வரி, என்று தனி தனி சுங்க வரி விதித்து. இன்றைய அரசாங்கம் போல, அன்றே தன் மதி நுட்பத்தால் மக்களுக்கு கடுமையான வரி விதித்து, தனது அரசு கஜனாவை நிரப்பியவரை, நடுநலையார்கள் பாரட்ட தான் செய்வார்கள். அவுரங்கஜேப் ஏதிர்கக தான் செய்வார்கள்..

அப்படி ராஜராஜ சோழன் வரி விதித்தால் தான் தனது கனவு அலயமான, பிரம்பாண்டமான தஞ்சை பெரிய கோயிலை கட்ட முடிந்து. சரித்திரத்தில் இடம் பிடிக்க முடிந்தது.


அவரது நிரப்பிய கஜானவின் செல்வங்களை கொண்டு தான். ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் படைகளை திரத்தி, கடல் கடந்து பல தேசங்களை பிலப்பைன்ஸ் வரை வெல்ல முடிந்தது. என்பதை யாராலும் மறக்க முடியாது.

இராசேந்திர சோழன் பற்றி அறிந்து கொள்ள <<இங்கே>>  கிளிக் செய்யுங்கள்..

ராஜராஜ சோழனுக்கு பிறகு 200 வருடங்களுக்கு மேலாக, இந்த சுங்க வரி இருந்தது.
அதை இரண்டாம் குலேந்துங்க சோழன் சுங்க வரியை நிக்கியதால் தான். அவரை மக்கள்
"சுங்கம் தவிர்த்த சோழன்" என்று அன்பாக அழைத்தனர், என்பது வரலாறு.
வரி நிக்கிய பின் சோழ சாம்ராஜ்ஜியமே அழிந்து என்பது நிதிர்சன உண்மை....
வரி எவ்வளவு முக்கியம், என்பதை இதில் முலம் அறிந்து கொள்ளலாம்.

ஏதே இந்துகளுக்கு மட்டும் தான். ஜிஸ்யா வரி விதத்து மாதிரி ஒரு மாயை, சில வரலாற்று ஆசிரியர்கள் உருவாக்கிறார்கள்.
இந்துகளை விட முஸ்லிமகளுக்கே ஜக்காத், என்ற அதிக வரி தான் இருந்தது.
அக்பர் முதல் ஷாஜகான், வரை ஜக்காத் என்ற வரியும், குறுநில மன்னர்கள் தரும் வரியை கொண்டு தான் முகலாய அரசு செய்லபட்டது..

இஸ்லாமிய ஆட்சியில் வரி எவ்வாறு வசூலிக்கப் படுகிறது?

முஸ்லிம்கள் மீது ஜகாத் எனும் வரியை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள்தங்களிடமுள்ள் தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம்ஆகிய அனைத்திலிருந்தும் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைபட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி, மற்றும் பணத்தில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப் படும்பொருட்களில் அய்ந்து சதவீதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்துசதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவுகணிசமான வரி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொருமுஸ்லிம்களிடத்திலும் இந்த தொகையை கட்டாயமாக வசூலிக்க இஸ்லாமிய அரசுக்குகுர்ஆன் கட்டளை இடுகிறது.

இப்படி வசூலிக்கும் தொகையை யாருக்கு கொடுக்க வேண்டும்?

ஏழைகள், பரம ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கன், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டராணுவ வீரர்கள், மற்றும் நாடோடிகள் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவுசெய்யும். ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப் பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்துவரும் போது, அந்த நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் எந்த வரியும்செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. முஸ்லிம் அல்லாதவர்கள் மீதும்ஜகாத் வரியை கடமையாக்கினால் இஸ்லாமிய சட்டத்தை இந்துக்கள் மீது திணிப்பதாகஆகும். எனவே தான் இது போன்ற நிலையில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்றவரியை (ஜகாத் என்ற வரிக்கு பகரமாக) விதிக்க குர்ஆன் கட்டளையிடுகிறது. இதைத்தான்ஒளரங்கஜேப்பும் செய்தார். இதைத்தான் நமது வரலாற்று ஆசிரியர்கள் குறை கண்டு எழுதிவைத்திருக்கிறார்கள்.

அப்படி வரி விதித்தால் தான். அரசை நல்ல முறையில் செயல்படுத்தினார். ஏன்? முழு இந்தியாவையும், பாக்ஸ்தான், அப்கான், பங்களாதேசு, மற்றும் பர்மா. வரை தனது ராஜ்ஜியத்தை விரிவு படுத்த முடிந்தது. சரித்திரத்தில் இடம் பிடிக்க முடிந்தது...

 வரியை நிக்கினார் 
*முகலாயர்கள் ஆட்சியில் தீபாவளிக்கு ஹிந்துக்கள் விளக்கு வைக்கவும்,
முகரம் பண்டிகைக்கு ஃபார்சிகள் விளக்கு வைக்கவும் வரி செலுத்த வேண்டிய வழக்கம் இருந்தது,
இதை அவுரங்கசீப் முற்றிலும் தடை செய்தார்.
*அதேபோல் கங்கை நதியில் நீராட வரிசெலுத்தும் முறை இருந்தது,
அந்த வரியை நீக்கி உத்தரவிட்டார் மாமன்னர் அவுரங்சீப்.
*இறந்தவர்களின் அஸ்தியை கங்கையில் கரைக்கவும் வரி பெறப்பட்டது.
அதையும் மன்னர் அவுரங்கசீப் தடைசெய்தார்.
*நதிகளில் மீன்பிடிக்க வரி,
பால் கறக்க வரி,
பாத்திரங்கள் செய்து விற்ப்பதற்க்கு வரி,
காய்கறிகள் விற்ப்பதற்க்கு வரி,
வறட்டியை உபயோகிக்க வரி என
வழக்கத்தில் இருந்த அனைத்தையும் தடை செய்து ஏழைகளின் அன்பை பெற்றார்.
*மேலும் ஒடுக்கப்பட்ட ஹிந்துப்பெண்கள் மறுமணம் செய்யவும்
வரி செலுத்தும் முறை இருந்தது,
அதையும் மன்னர் அவுரங்கசீப் தடை செய்தார்!

மேலும் ஓளரங்கஜேப் பற்றி சில கட்டுரைகளின் லிங்க கீழே..

ஒளரங்கசீப்... மறைக்கபடும் வரலாற்று உண்மைகள்...  http://rahmanfayed.blogspot.in/2013/06/blog-post.html

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப் பற்றி சில தகவல் - I. http://www.rahmanfayed.blogspot.in/2012/07/blog-post.html

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப் பற்றி சில தகவல் - II. http://rahmanfayed.blogspot.in/2012/09/ii_4520.html

முகலாயர்கள் நல்லவரா? கெட்டவரா?  http://www.rahmanfayed.blogspot.in/2012/09/blog-post_21.html

முகலாயர்கள் நல்லவரா? கெட்டவரா?- II http://www.rahmanfayed.blogspot.in/2012/09/ii_24.html