Saturday, August 25, 2012

போதிதர்மா-ஒரு முழு வரலாறு

போதிதர்மா-ஒரு முழு வரலாறு 

போதிதர்மா...rko..

போதிதர்மா பிறந்த பல்லவ குலம் எங்கிருந்தது? 

 அலெக்சாண்டர் இந்தியாமீது படையெடுத்து வெற்றிபெற்றது, பின் தாய்நாடு திரும்பியது பற்றி அனைவருக்கும் தெரியும். போகும் பொழுது தாம் வென்ற பகுதிகளை நிர்வாகம் செய்ய அவர் ஒரு படைத் தளபதியையும் படை வீரர்களையும் விட்டுச் சென்றார் என்கிறது வரலாறு.
அலெக்சாண்டர் great..rko..

அந்தக் காலகட்டத்தில்தான் சந்திரகுப்த மௌரியர் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தார். சில காலத் திற்குப் பின் மௌரியப் பேரரசு வலிகுன்றியது. 
சந்திரகுப்த மௌரிய
அதேசமயத்தில் அதாவது கி.மு. 234-ல் சாதவாகனப் பேரரசு தக்காணத்தில் தோன்றியது. இவர்கள் பிராமண மதத்தைப் பின்பற்றியவர்கள். ஏறக்குறைய 450 ஆண்டுக்காலம் சாதவாகனர்களின் பேரரசு நீடித்திருந்தது. அது வலி குன்றிய காலத்தில் பல்லவ ஆட்சி தொடங்கியது.

அதற்கு முன்பு பல்லவர்கள் சாதவாகனப் பேரரசின் படைத் தலைவர்களாய் இருந்தனர் என்று தெரிகிறது. கி.பி. 80 முதல் கி.பி. 104 வரையில் அரசாண்ட சாதவாகனப் பேரரசனான கௌதமி புத்திர சதகர்ணி சகர், பல்லவர், யவனர் ஆகியவர்களை அழித்தவனென்று வர்ணிக்கப்பட்டான். இதன்மூலம் அலெக்சாண்டர் படையெடுப்பின்போது வந்த யவனர்கள் வடஇந்தியா மட்டுமல்லாது தென்னிந்தியா வரை பரவி, அங்கங்கே படைத் தளபதிகளாய் இருந்தனர் என்பதை அறியலாம்.

இப்படி ஆந்திர நாட்டிலிருந்து வடஇந்தியா வரை பரவியிருந்த மிகப் பெரிய சாதவாகனப் பேரரசு அழிந்தபோது, அதன் பல பகுதிகளையும் ஆங்காங்கு பொறுப்பில் இருந்தவர்கள் ஆளத் தொடங்கினர். 
அப்படித்தான் அந்தப் பேரரசின் தென்கிழக்குப் பகுதியில் பல்லவர்கள் தங்களுடைய ஆட்சியை நிறுவினார்கள். அவர்கள் தங்களைப் பரத்துவாஜ கோத்திரத்தினர் என்று கூறிக்கொண்டனர்.

பல்லவர்கள் பிராமண மதத்தைப் பின்பற்றினார் கள். அவர்கள் ஆட்சி பெற்ற முதல் சில நூற்றாண்டு களில் வெளியிட்ட செப்பேடுகளும் பட்டயங்களும் வடமொழியிலேயே அமைந்திருந்தன. பாரவி, தண்டி போன்ற வடமொழிப் புலவர்களையே ஆதரித்தனர். யாகங்களைச் செய்து தான- தருமங்களையும் செய்தனர்.

முற்காலப் பல்லவனான ஸ்கந்தவர்மன் அரசனாயி ருந்த காலத்தில் பல்லவ ராஜ்ஜியம் வடக்கே கிருஷ்ணா நதி வரையிலும், மேற்கே அரபிக்கடல் வரையிலும் பரவியிருந்தது. இடைக்காலப் பல்லவருள் ஒருவனான குமாரவிஷ்ணு கைநழுவிப் போயிருந்த காஞ்சியைக் கைப்பற்றினான். இவனுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவரே போதிதர்மர் என்று அறியப்பெற்ற புத்த வர்மன் ஆவார்.

கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)
11. கால ஒற்றுமை
1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.
(THANKS WIKIPEDIA ) 

போதிதர்மா வரலாறு .


போதி தருமன் ஒரு தமிழன். கி.பி.5ஆம் நூற்றாண்டில், காஞ்சியைத் தலநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த ஒரு பல்லவ அரசனின் 3வது மகன்.சிறந்த வீரன். தற்காப்புக் கலைகளை விசேஷமாக பயின்றவன். அரசு, ஆட்சியை விரும்பாமல் – மனம் சொல்லும் வழியில் செல்கிறான்.பிரஜ்னதரா என்கிற மஹாயான பௌத்த துறவியை தன் குருவாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆன்மிகத்தில் தெளிவு பெறுகிறான். 

புத்த மதத்தை கிழக்கு நாடுகளுக்கு கொண்டு செல்ல விரும்பி, கடல் வழியே - இன்றைய – மலேசியா, இந்தோனேஷியா, வியட்னாம், தாய்லாந்து வழியாக 3 ஆண்டுகள் பயணத்திற்குப் பிறகு கி.பி.527ல் சீனா சென்றடைந்திருக்கிறான். சீனாவில் (போதி) தருமன் – தா மோ என்று அழைக்கப்பட்டிருக்கிறான். தா மோ வை தெற்கு சீனாவை ஆண்டுகொண்டிருந்த அப்போதைய சீன அரசன் வூ வரவேற்று உபசரித்திருக்கிறான். அந்த மன்னனின் தற்பெருமை, அகம்பாவம் ஆகியவற்றை தா மோ வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விளைவு -மன்னனின் கோபம், விரோதம். அந்த ராஜ்ஜியத்தை விட்டு வெளியேற உத்திரவு. பின்னர் வட சீனாவிற்கு சென்ற தா மோ, யாங்ட்சி ஆற்றின் கரையில் இருந்த ஷாவோலின் கோயிலை அடைகிறான். 
 
கோயிலில் இருந்தவர்களின் அழைப்பை முதலில் ஏற்காமல் அருகில் இருந்த மலைக்குகை ஒன்றில் தவம் இருக்க ஆரம்பிக்கிறான். மலைக்குகையில் ஒன்பது ஆண்டுகள் ஒரு சுவற்றின் முன்னால் உட்கார்ந்து கடுமையான தவத்தை மேற்கொள்கிறான். தவத்தின் விளைவாக, புதிய உத்வேகத்தைப் பெற்று, ஷாவோலின் கோயிலில் தன்னை இணைத்துக் கொள்கிறான். ஷாவோலின் பள்ளியில், பிள்ளைகளுக்கு பௌத்தம், தியானம் மற்றும் தற்காப்புக் கலைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். (சீனாவில் தா மோ ) சீனாவில் புத்த மதம் பரவ, உறுதிப்பட முக்கிய காரணமாக இருந்தவன் இங்கிருந்து சென்ற தமிழன் போதி தருமன். போதி தருமன் என்கிற தமிழனால் உருவகம் பெற்றது தான் ஜென் புத்த மதம். புத்தரின் 28வது நேரடி சீடராக தருமனை சீனர்கள் ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் ஜப்பானிலும் -வேறு வடிவங்களில் தருமன் புகழ் பெற்றான்.ஜப்பானில், அவன் அதிருஷ்டத்தைத் தருபவனாகக் கொண்டாடப்பட்டான். 

சீனாவிலும், ஜப்பானிலும் இன்றும் தாமோ வுக்கு ஏகப்பட்ட கோயில்கள் இருக்கின்றன. தருமனது முடிவு பற்றி வெவ்வேறு கதைகள் வழங்குகின்றன.அவன் 150 வயது வரை வாழ்ந்ததாகவும், இறந்த பிறகு ஜியாங் மலைச்சரிவில் புதைக்கப்பட்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.ஆனால் அவனைப் புதைத்து 3 ஆண்டுகள் கழித்து, பாமியன் மலையருகே,கையில் ஒற்றைச் செருப்புடன் சென்று கொண்டிருந்த தருமாவைக் கண்டதாக, வெய் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறி இருக்கிறார். எங்கே போகிறீர்கள் என்று அவர் கேட்டதற்கு, தர்மா “என் வீட்டிற்கு செல்கிறேன்” என்று சொன்னாராம். சந்தேகப்பட்ட மற்றவர்கள் தருமனின் கல்லறையை திறந்து பார்த்தபோது, அங்கே ஒற்றைச் செருப்பு மட்டுமே இருந்ததாகவும், தர்மாவின் உடலைக் காணவில்லை என்றும் ஒரு வரலாறு கூறுகிறது. போதி தருமன் பற்றிய வரலாற்றுக்கு சீனாவிலும், ஜப்பானிலும் பல வடிவங்கள் இருந்தாலும், அடிப்படையில் அவன் தமிழ் நாட்டில் காஞ்சியிலிருந்து சென்றவன் என்பதும், சீனாவில் ஜென் புத்த மதமும், தற்காப்புக் கலையை சொல்லிக் கொடுக்கும் ஷாவோலின் பள்ளியும் உருவாக அவன் முக்கிய காரணமாக இருந்தான் என்பதும் வரலாற்றில் ஒரே மாதிரி தான் கூறப்பட்டுள்ளன. உண்மையில் மிகவும் பெருமையாக இருக்கிறது. 

அதே சமயம் வருத்தமாகவும் இருக்கிறது. சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு - தமிழ் நாட்டின் வரலாற்றில் காணப்படவில்லையே.


சீனாவில் பௌத்த மதம் செல்வாக்கோடு திகழ்ந்த போதிலும் அதற்கு புத்துயிர் ஊட்ட வேண்டியிருந்தது. எனவே சீனாவின் தென்பகுதியை ஆண்ட லொயாங் அரச மரபைச் சேர்ந்த சக்கரவர்த்தி வு டியின் வேண்டு கோளுக்கு இணங்க, 27-ஆவது குரு பரம்பரையைச் சேர்ந்த பிரஜ்னதாரா என்பவர் தமது சீடரான போதிதர்மாவை அங்கு செல்லும்படி கட்டளையிட்டார்.

அவர் கட்டளையை ஏற்று கடல்வழியாக சீனா புறப் பட்ட போதிதர்மா ஜாவா வழியாகக் கான்டன் துறைமுகத்தை அடைந்தார். அங்கிருந்து நான்ஜிங் சென்றவரை சக்கரவர்த்தி வு டியே நேரில் சென்று வரவேற்றார். பெரிய கண்கள், ஆக்ரோஷமான முகம், அச்சந்தரும் தோற்றம், கையில் நீளமான தடியுடன் போதிதர்மாவைப் பார்த்த சக்கரவர்த்திக்கு அச்சம் பிறந்தது.

அரண்மனையிலேயே தங்கும்படி சக்கரவர்த்தி கேட்டுக்கொண்டும் மறுத்துவிட்ட போதிதர்மர் ஷாங் மலையில் உள்ள ஷாவோலின் கோவிலுக்குச் சென்று தங்குகிறார். விடியற்காலையில் தனியே வந்து சக்கரவர்த்தி யைப் பார்த்து "மனதைத் தேடிக் கண்டுபிடி' என்று சொல்லி தியானத்தில் அமரச் சொல்லுகிறார். தியானத்தில் தன்னை மறந்து போகும் சக்கர வர்த்தியைப் பாராட்டுகிறார்.

அதன்பிறகு அந்த மலையில் உள்ள சிறிய குகை ஒன்றில் புகுந்து அதன் சுவரைப் பார்த்தபடி அமர்ந்து கொள்கிறார். சுமார் ஒன்பது வருடங்கள் தியானத்தில் இருக்கும் அவரை ஹியூகி என்பவன் திரும்பி அனைவரையும் பார்க்கும்படிச் செய்கிறான். அவனையே முதல் சீடனாக ஏற்றுக்கொள்கிறார். 

அதன்பிறகு மேலும் மூன்று சீடர்கள் சேருகிறார்கள்.

ஷாவோலின் துறவிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பிய போதி தர்மா தென்னிந்தியக் களரிச் சண்டை முறையை சீன நாட்டில் அன்றிருந்த சண்டை முறையோடு கலந்து குங்ஃபூ என்ற தற்காப்புக் கலையை உருவாக்கி அனைவருக்கும் கற்றுத் தந்தார்.

துறவிகள் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முற்றிலும் புதிய "டாய்சீ' என்ற நடனக் கலை யைக் கற்றுத் தந்தார். ஸென் என்னும் புதிய தியான முறையைக் கண்டுபிடித்து சீனாவில் புகுத்தினார். ஷாவோலின் துறவிகள் கட்டாயம் வைத்தியம் செய்யத் தெரிந்திருக்க வேண்டுமென்று எண்ணி அதையும் கற்றுக்கொடுத்தார். இவருடைய முறைகள் சீனா முழுவதும் பிரபலமானது.

தனக்குப் பிறகு தான் கண்டுபிடித்தவற்றைத் தொடர்ந்து பரப்புவதற்கு வாரிசு ஒருவரை நியமிக்க எண்ணி, முதல் சீடனான ஹியூகியைத் தேர்ந்தெடுத்து அறிவிப்பும் செய்தார். அதனால் பொறாமையும் சினமும் கொண்ட மற்ற மூன்று சீடர்களில் ஒருவன் அன்றி ரவு அவருடைய உணவில் விஷத்தை வைத்துவிட்டான்.

போதிதர்மா இறந்ததும் அவருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. அவர் இறந்த சில நாட்கள் கழித்து இமயமலையின் சாரல் பக்கமாக போதிதர்மரைப் போன்ற ஒருவர் தடியோடு சென்றதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.

துறவிகள் எப்பொழுதும் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகப் தன்னுடைய கண்ணிமைகளில் இருந்து பிடுங்கி எறிந்த உரோமங்களே தேயிலைச் செடிகளாக முளைத்தன என்று ஒரு செய்தியும் சீனா வில் உலவுகிறது. என்ஸைக்ளோபிடியா ஆப்பிரிட் டானிக்காவிலும் இந்தச் செய்தி இருக்கிறது.

மேலே உள்ள செய்திகள் சரித்திரத்தின் அடிப்படை யில் தரப்பட்டன. போதிதர்மர் தமிழரா அல்லவா என்ற விவாதத்திற்குள் நுழைய நான் விரும்பவில்லை. இன்று உலகிலுள்ள மக்களில் பெரும்பாலோர் பல்வேறு கட்டங்களில் மாற்றாரின் தாக்குதலுக்கு ஆளாகி தனித் தன்மையை இழந்துவிட்டிருக்கிறார்கள் என்பதே ஆராய்ச்சியாளரின் துணிபு.

சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு !!!


போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒருபௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றா
ம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.

குங்ஃபூவும் போதி தருமனும்


போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.

1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.

2.டான்லின் பதிவுகள் (Tánlín)
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.
3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).

4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.

5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.

6.யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué
யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)

8.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī ( bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.

9. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்

10. போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.

தவிரவும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்கின்படி தமிழ் பேசி தமிழ்நாட்டில் வசித்து வரும் அனைவரும் தமிழரே. 

அப்படியானால் போதிதர்மாவும் தமிழர்தானே. ,,,,.....,,,


special thanks to
பரதவன் ..
.

1 comment:

  1. bodhidarma tamilan pallavarkal varalru thidam podu maraika padukirathu

    ReplyDelete

welcome ur comment,