Sunday, March 29, 2015

‘வாய்னிச்’ கைப்பிரதி புத்தகத்தின் மர்மம் விலகுமா?

‘வாய்னிச்’ கைப்பிரதி புத்தகத்தின்  மர்மம் விலகுமா?


 ‘வாய்னிச்’ என்ற கைப்பிரதி புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இப்புத்தகம், இன்னும் யாராலும் விளக்கம் சொல்ல முடியாத வரி வடிவங்களாலும், படங்களாலும் கையால் எழுதப்பட்டுள்ளது. இது எப்போது எழுதப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கதிரியக்க கார்பன் தேதியாக்க முறை மூலமாக இது எழுதப்பட்ட காலம் 15-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அறியப்பட்டுள்ளது.

இது இத்தாலி மறுமலர்ச்சி காலத்தில் வடக்கு இத்தாலியில் எழுதப்பட்டது என்று அறியப்படுகிறது. புத்தகப் பதிப்புரிமையாளர் ஒருவரிடம் இருந்து 1912-ம் ஆண்டு வில்பிரடு வாய்னிச் என்பவர் இந்தக் கைப்பிரதி புத்தகத்தை வாங்கினார். இதில் காணாமல் போன அல்லது தவறிப் போன பக்கங்களைத் தவிர 240 பக்கங்கள் மீதம் இருக் கின்றன.

இதில் உள்ள எழுத்துக்கள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டு உள்ளன. பெரும்பான்மையான பக்கங்களில் ஏதாவது ஒன்றை விளக்கும் வகையில் உள்ளது அல்லது படங்கள் இருக்கின்றன. பெரும்பான்மையான மக்கள் இதனைப் பார்த்துவிட்டு, இதில் உள்ள புரியாத எழுத்துக்களும் படங்களும் முட்டாள் தனமானவை என்று கூறுகின்றார்கள்.

2013-ம் ஆண்டு மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சொற்பொருள் ஆய்வாளர்கள் இதை காகிதத்தில் பதிப்பித்து, இதில் கண்டுள்ள விஷயங்கள் சங்கேதக் குறியில் எழுதப்பட்டுள்ளன என்று கூறுகின்றனர்.
சில ஆராய்ச்சியாளர்கள் இது முழுக்க முழுக்க எந்த ஒரு விஷயத்தையோ செய்தியையோ வெளிப்படுத்துவதற்காக வெளியிடப்படவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் இது ஏதோ ஓர் அர்த்தத்துடன் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்புகளாக இருக்கலாம் என்பது ஒருசாராரின் கருத்து.
ஆனால் எப்படியோ யாருக்கும் இது புரிந்த மாதிரி இல்லை. இந்தப் புத்தகம் கூறும் மர்மம் விலகுமா?

No comments:

Post a Comment

welcome ur comment,