Monday, April 22, 2013

மலர்வழி :: தீவிரவாதிகள் யார்?



rahmanfayed : தீவிரவாதிகள் யார்? என்று எழுதிய சகோதரி மலர்வழி எழுதிய "பாவப்பட்ட முஸ்லிம் பலி ஆடுகள்!!"  பதிவை உங்களிடம் சமர்பிக்கிறேன் ..

பாவப்பட்ட முஸ்லிம் பலி ஆடுகள்!!


சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு:


Feb 18 2007 - 68 பேர் பலி, அதிகமானோர் பாகிஸ்தானியர் என்று குற்றம் சுமத்தப்பட்டது - (லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் முகம்மத்)சி.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் – ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள்

மாலேகான் குண்டுவெடிப்பு-1


Sep 8 2006 - 37 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - சல்மான் பார்சி, பாருக் இக்பால், ரயீஸ் அஹமத், நூருல் ஹுதா, ஷபீர்.ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் ஹிந்த்துத்துவ தீவிரவாதிகள்

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு:


May 18 2007 - 14 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - 25 முஸ்லிம்கள் குற்றவாளிகளாக. 80 முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில்.
சீ.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள்- ஹிந்துத்துவ தீவிரவாதிகளான சந்தீப்டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா, லோகேஷ்சர்மா

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு :


Oct 11 2007 - 3 முஸ்லிம்கள் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் முஹம்மத்சி.பி.ஐ., ஏ.டி.எஸ். விசாரணைகளில் உண்மை குற்றவாளிகள் - ஹிந்துத்துவ தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா, சந்திரசேகர், பிரசாத், அனில் ஜோஷி.

மாலேகான் குண்டுவெடிப்பு-2


Sep 29 2008 - 7 பேர் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - இந்திய முஜாஹிதீன்கள்.
ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் - அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரிய ஜாக்ரன் மன்ச் ஆகிய ஹிந்துத்துவ தீவிரவாதிகள்.

தானே சினிமா குண்டுவெடிப்பு:

முஸ்லிம் சம்பந்தப்பட்ட ஹிந்திப் படத்தை எதிர்த்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு.

Jun 4 2008. ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களான ஹிந்து ஐங்காகிருதி சமீதி, சனாதன் சன்ஸ்தா. ‘ஜோதா அக்பர்’ என்ற முஸ்லிம் சம்பந்தப்பட்ட ஹிந்திப் படத்தை எதிர்த்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு.

கான்பூர்,நந்தித் குண்டுவெடிப்பு முயற்சிகள்:


Aug 2008இரு இடங்களிலும் குண்டு தயாரிக்கும் சமயத்தில் வெடித்து 4 ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் பலி.

கோவா குண்டுவெடிப்பு:
 


Oct 16 2009. குண்டு வைக்கும் முயற்சியில் சனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்துத்துவ தீவிரவாதிகள் 2 பேர் பலி

தமிழ்நாட்டில் தென்காசி குண்டுவெடிப்பு :

தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. தாடியும், தொப்பியும் தடயங்களாக விட்டு சென்று முஸ்லிம்களின் மேல் பழியைப் போட முயன்ற இந்து முன்னணி பயங்கரவாதிகளை வளைத்து பிடித்தது தமிழக காவல் துறை.
http://rahmanfayed.blogspot.in/2013/04/blog-post_22.html
மேலும் ராம சேனா என்ற அமைப்பின் ப்ரவீன் முத்தலீக் என்பவன் முஸ்லிம்களின் மேல் செயற்கையாக மதக்கலவரத்தை உருவாக்க விலை பேசி, குண்டு வைப்பது மட்டும் எங்கள் கலாச்சாரமல்ல; கலவரங்களை செயற்கையாக உருவாக்கி முஸ்லிம்களை கருவறுப்பதும் எங்களது கைவந்த கலை தான் என்பதை உலகத்திற்கு புரிய வைத்தான். கேமராவை மறைத்து வைத்து அவனிடம் ரகசியமாகவும் நைச்சியமாகவும் பேசிய போது கலவரம் நடத்த பேரம் பேசி விலை நிர்ணயம் செய்த அயோக்கியத்தனம் வெளியுலகிறகு கசிந்தது.

இன்னும், ஹைதராபாத்தில் மாட்டுக்கறியை கோவிலில் வீசி விட்டு அந்தப் பழியை முஸ்லிம்களின் மேல் போட்டு கலவரத்தை தூண்ட நினைத்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டதும்... (இதே யுக்தி மதுரையிலும் முன்னோட்டமிடப்பட்டது. ஆனால் கைது செய்தது முஸ்லிம்களை)
பாகிஸ்தான் கொடியை ஏற்றிய  காவி தீவிரவாதி கைது

கர்நாடாகாவில் அரசு அலுவலகத்தில் புது வருஷ தினத்தன்று பாகிஸ்தான் கொடியை ஏற்றி, முஸ்லிம்களின் மேல் பழியைப் போட இருந்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டு பல முஸ்லிம்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதும்..

இப்படியே போகும் காவி தீவிரவாதம் இல்லை சங்பரிவார் பயங்கரவாதம் நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைத்து, சமூக ஒற்றுமையை குலைத்து வரும் நிலையில் இத்தனை குண்டு வெடிப்புகளுக்கும் "பலிகடா" வாக்கியது முஸ்லிம்களைத் தான்.

முதலில் முஸ்லிம்களும் இத்தனை குண்டு வெடிப்புகளையும் செய்தவர்கள் முஸ்லிம்களே என்று நம்பி வந்தனர். அதற்கு காரணம் குண்டு வெடித்தவுடனே முஸ்லிம் அமைப்புகளை தொடர்புப்படுத்தி, முஸ்லிம்களையே குற்றவாளியாக்கி தீர்ப்பையும் எழுதி விடும் ஊடகத்தின் பாரபட்ச போக்கு. காவி தீவிரவாதிகளின் குண்டு வெடிப்புகளுக்கு தங்கள் உயிரையும் வாழ்க்கையையும் பலி கொடுத்து வந்த முஸ்லிம்களின் இந்த நிலைமை, சங்பர்வார்களுக்கு மிகவும் வசதியாக போனது. காவிகள் வைக்கும் குண்டுகளுக்கு அப்பாவிகள் தண்டனை பெற்றனர். இதனால் காவி தீவிரவாதம் மறைவாகவும் விரைவாகவும் வளர்ந்து வந்தது.


ஆனால், சமீபகாலமாக குண்டு வெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் எல்லோரும், 10 அல்லது 15 வருடங்கள் கழித்து நிரபராதிகள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் நிரபராதி என்றால்.. உண்மை குற்றவாளி யார்?

வழக்கை தோண்டினால் வண்டி வண்டியாக காவி பயங்கரவாதத்தின் சுயரூபம் பல்லிளிக்கிறது. அரசாங்கமே இலைமறை காயாக சங்பரிவாரங்களின் கொட்டங்களை கண்டும் காணாமல் இருந்து வந்தாலும், ஒரு கட்டத்தில் இந்தியாவின் இறையாண்மையைக் காக்கும் பொருட்டு, நாடாளுமன்றத்திலேயே தூக்கி போட்டு உடைத்தார்கள். காவி தீவிரவாதம் என்று ஒன்று இருப்பதாக அப்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஒத்துக்கொண்டார்.



அதன் தொடர்ச்சியாக இப்போதைய அமைச்சர் ஷிண்டேவும், ஒரு படி மேலே போய், இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் பயங்கரவாத பயிற்சியைக் கொடுத்து வருகின்றன என்ற அப்பட்டமான நிஜத்திலும் நிஜமான உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார்.

இதே கருத்தை தான் நாம் தமிழர் சீமான், விடுதலை சிறுத்தை திருமாவளவன், திராவிட கழக கீ. வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய் போன்றோரும் கூறி வருகின்றனர்.முன்னர் காவி தீவிரவாதத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மாவீரன் கார்க்ரேயையும் திட்டம் மிட்டு கொலை செய்தார்கள்.
மாவீரர் ஹேமந்த் கார்கரே IPS..

இதுவரையிலும் அவருடைய மரணம் மர்மமாகவே உள்ளது. பொய்யால் பூசி மெழுகி வந்த உண்மை தடாலென்று உடைந்ததால் குய்யோ..முறையோ என்று குதிக்கிறார்கள். இதனால் நாடாளுமன்றத்தை நடத்தவிடமாட்டோம் என்று பா.ஜ.க.மிரட்டுகிறார்கள்.
 
மாவீரர் ஹேமந்த் கார்கரே IPSற்றி அறிந்து கொள்ள <<இங்கே>> கிளிக் செய்யுங்கள்..
இதே நிலை நீடித்தால் அப்பாவிகள் குற்றவாளிகலாக்கபடுவார்கள். உண்மை குற்றவாளிகள் சுதிந்திரமாக தப்பிக்க வழிவகையாக ஆகிவிடும்.

இங்கே உண்மையை உணர்ந்து கடமையை செய்யுமா காவல்துறை என்பது கேள்விகுறி தான்.எப்படியோ குண்டு வெடித்தால் கைது செய்ய முஸ்லிம் அடிமைகள் இருக்கிறார்கள் என்றே காவல் துறை கவலை இல்லாமல் இருக்கிறது.

நன்றி- மலர்விழி 

1 comment:

  1. மலர்வழியை போல பெண்களால் தான். இந்து மதம் அழிகிறது மவளே கையில கிடைத்தால்?

    திருமாவளவன் ஒரு காதல் பரப்பும், காம பொறுக்கி.
    சீமான் ஒரு லூசு பையன்.
    வீரமணி கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மிருகம்,
    இவங்க எல்லாம் சொல்லுராங்கனு சொல்லி, இந்த பதிவை எழுதும் நீ, ஒரு பயங்கரவாதி.
    நீ உன் துலங்க கூட்டம் எல்லாம், பாக்கிஸ்தான் போங்கடா, அப்ப எங்க இந்தியா முன்னேறும்..

    ReplyDelete

welcome ur comment,