Tuesday, December 11, 2012

மாவீரர் ஹேமந்த் கார்கரே IPS

மாவீரர் ஹேமந்த் கார்கரே IPS..

 
மும்பை காவல்துறையின் சூப்பர் ஸ்டார் ஹேம்ந்த் கர்கரே பிறந்ததினம் 12.12.12

 

 26/11 மும்பையில் அப்பாவிகளை கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காக்கும் காவல் பனி
யில் இடுப்படும்போது தன் உயிரை இந்தியாவிற்க்காக தந்த மராத்திய மாவீரன்.

 

இந்தியாவில் நடந்த ர(த்)தயாத்திரை - பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் நடந்த "பயங்கரவாத குண்டுவெடிப்பு கலாச்சாரத்தை" பொருத்த மட்டில்... அதை நாம் "கார்கரேக்கு முன்" என்றும், "கார்கரேக்கு பின்" என்றும் இரண்டாக பிரிக்கிறோம்.  

'கா.மு', வில்... அரசின் கட்டளைக்கிணங்க... அல்லது ஓட்டரசியலில் அரசு எதிர்ப்பார்ப்பதை பூர்த்தி செய்யும் விதத்தில்... அல்லது அரசை பதவி உயர்வுக்காக குளிர்விப்பதற்கு... என்று ஏதோ ஒரு விதத்தில்... ஒவ்வொரு குண்டு வெடிப்பு நடந்து முடிந்த உடனேயே... 'இவர்களிடம் இருந்து மெயில் வந்தது, அவர்களிடம் இருந்து கடிதம் வந்தது' என்று பிரஸ்மீட்டில் ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயரை சொல்லி... "அது "பொறுப்பேற்று க்கொண்டது" என்று தொடர்ந்து ஒரே ஒரு பல்லவியையே எல்லா குண்டு வெடிப்பு நடந்த பிளாஷ் நியூஸ்களுக்கு வால் பிடித்து பின்னாடியே... ஏக ராகத்தில் பாடி வந்தது... நமது இந்திய உளவுத்துறையும் காவல்துறையும் என்பதை அப்போது செய்திகளை பின்பற்றியோர் நிச்சயமாக அறிவர்..!
இந்த உளவுத்துறை கருத்தையே... பூவும் பொட்டும் வைத்து, சடை பின்னி, ரிப்பன் வைத்து, ஹேர்பின் குத்தி, நகை நட்டு போட்டு... பட்டு அலங்காரம் இட்டு... தொடர்ந்து மக்கள் மத்தியில் வசீகரமாக உலவ விட்டு... கருத்துத்திணிப்பு மூலம் மூளைச்சலவை செய்ததில்... மாபெரும் வெற்றி பெற்றன... நமது முன்னணி ஊடகங்கள் அனைத்துமே..! 

 
.
சரி.. அப்படி என்னதான் சாதித்தார் கார்கரே..? காலண்டரில் 'கா.மு-கா.பி' போடும் அளவுக்கு..?

அதுவரை... "குண்டு வெடிப்பு என்றாலே... அது முஸ்லீம்கள் மட்டுமே அறிந்து வைத்து செயல்படுத்திக்கொண்டு இருக்கும்... வேறு எவருக்கும்  புரியாத ஒரு அதிவினோத தொழில்நுட்பம்" என்று மக்கள் மனதில் மிக மிக ஆழமாக மூளை சலவை மூலம் பதிய வைத்து இருந்த அஸ்திவாரத்தை தூள் தூளாக்கி உடைத்து நிர்மூலமாக்கியவர்தான்...அஞ்சாநெஞ்சர் நேர்மையின் சிகரம் சத்திய தியாகி ATS தலைவர் மாவீரர் ஹேமந்த் கார்கரே IPS அவர்கள்..! 
மாலேகானில் ஆரம்பித்து... ஏறக்குறைய... எல்லா குண்டு வெடிப்பு வழக்குகளிலும் துப்பு துலங்கி, காவி போர்வைக்குள் சாதுக்களைப்போல ஒளிந்து கொண்டிருந்த பயங்கரவாதிகளின் முகத்திரையை கிழித்தெறிந்து, குற்றவாளிகளை வெளிக்கொணர்ந்து, ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி, மக்களின் மூளைச்சளவை அஸ்திவாரத்தை தகர்த்து எறிந்து நிர்மூலமாக்கினார்..! இந்திய முஸ்லிம்களின் மீது அதுகாறும் போடப்பட்ட அநியாய அவதூறை தன் ரத்தத்தால் கழுவினார்..!

மும்பை மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குரின் சனாதன்..rahman.k.o.
90களின் இறுதி, 2000 களின் துவக்கம் எல்லாம்... 'கா.மு.' வில் இந்திய முஸ்லிம் ஆண்கள் கையில் ஒரு முட்டையோ/வெங்காயமோ அல்லது கிரிக்கெட்/டென்னிஸ் பந்தோ இருந்தால் கூட... அது வெடிகுண்டா இருக்குமோ என்ற பார்வை வரும். தாடி வளர்க்கக்கூட முடியாது. ஏனெனில், போலீஸ் ஸ்டேஷனில் தேடல் லிஸ்டில் எல்லார்க்கும் தாடி வரைந்து விட்டிருப்பார்கள். அப்படி தேடிப்பிடித்து கைதானவர்கள் எல்லாம் இன்று நீதிமன்றத்தால் நிரபராதிகள் எனப்பட்டு விட்டனர்..!
ஒரு முஸ்லிம் பெண் ரோட்டில் புருக்கா போட்டு நடந்தால்... அல்லது பேருந்தில் அமர்ந்து இருந்தால் கூட... திடுமென போலீஸ் உள்ளே ஏறி வந்து அப்பெண்ணிடம் சென்று கேட்கும்... 'உன் பெயர் ஆயிஷாவா'..? வேறொரு ஆயிஷாவாகவே அவர் இருந்தாலும், அவர் 'நான் ஆயிஷாவே இல்லை' என்று சொல்லவேண்டிய அவல நிலை..! ஆனால், 'கா.பி.'யில்... 'அந்த பெல்ட் பாம் ஆயிஷா மேட்டர் உண்மையல்ல' என்றனரே சென்னை போலீசார்..! உலக மகா கொடுமைடா..!
இந்திய அரசு இவருக்கு உயரிய அசோக சக்ரா விருது வழங்கியது.காவல் துறையில் மற்றும் இந்திய ராணுவத்திலும் இவரை போன்ற நல்ல அதிகாரிகளும்,வீரர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இந்தியாவின் ஒவ்வொரு முஸ்லிமும் மட்டுமல்ல... நேர்மையையும் உண்மையையும் விரும்பும் எல்லா சமயத்தவரும் ஹேமந்த் கார்கரேக்கு நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்..! இன்றெல்லாம் நான் பயங்கரவாதத்தை எதிர்த்து தலை நிமிர்ந்து இந்தியாவில் பதிவு எழுதுகிறேன் என்றால்... அவரை நினைவு கூறாமல் என்னால் இருக்க முடியாது. இவரை நம் நாட்டுக்கு ஒரு அருட்கொடையாக அனுப்பிய அந்த ஏக இறைவனுக்கே எல்லா புகழும்...! 
 
மாலேகான் குண்டு வெடிப்பு முதல்... ரியல் ஹீரோயின் திருமதி கார்கரே, நரேந்திர மோடியிடம் கோடி ரூபாய் நஷ்டஈடு(?) வாங்க மறுத்து துச்சமாக அதை அவரிடமே வீசி எறிந்தது,

 'கார்கரே கொலையில் மர்மம் இருக்கிறது' என்று பார்லிமென்டில் சொன்ன ஏ.ஆர்.அந்துலே... அதன் பிறகு அட்ரஸ் இல்லாமல் போனதும்...
ஹேமந்த் கர்கரே -ஐ கொலை செய்தது யார்? 

 

S.M.முஷ்ரீஃப் I.P.S. (முன்னால் மகாராட்டிர மாநிலத்தின் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அவர்கள் எழுதிய ஹேமந்த் கர்கரே -ஐ கொலை செய்தது யார்? என்ற புத்தகத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்.

























thanks to
mohammed ashiq...

12:12:12,
today my birthday also..

rahmanfayed.

 

 

No comments:

Post a Comment

welcome ur comment,