Saturday, June 30, 2012

இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் திருநெல்வேலி !!





இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் திருநெல்வேலி !!

திருநெல்வேலி பசுமை அழகு    


திருநெல்வேலி அருவாளுக்கு மட்டும் அல்ல அன்பிற்கும் அல்வாவிற்கும் தான் பெயர் பெற்றது
சேக்கிழாரும்


"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்.
சம்பந்தரும்


இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் திருநெல்வேலிதிருநெல்வேலி. இது வீரமான மட்டுமல்ல, ஈரமான ஊரும் கூட. "வாங்க அண்ணாச்சி. சவுக்கியமா இருக்கியளா? இருந்து சாப்டுட்டுத்தான் போணும்" என அன்புக்கட்டளையிடும் சாதி, மத பேதமற்ற மக்கள் நிறைந்த ஊர். வற்றாத தாமிரபரணி நதிக்கரையில் வாடாமல்லியாக பூத்து நிற்கும் திருநெல்வேலி, அந்தக்காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலை நகராகவும் மணம் வீசியது. சுமார் 2ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த திருநெல்வேலி சீமையில் பார்த்து ரசிக்கத்தக்க இடங்கள் நிறைய உண்டு.

குற்றாலம்:


திருநெல்வேலி மாவட்டம், தென்காசியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது குற்றலாம். தென் பொதிகை மலையில் அருவிகளின் நகரம், சிற்றாறு பாயும் மலைப் பகுதிகளே குற்றாலம்.
தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்த உடன் கேரளாவில் மழை பொழியும். குற்றாலத்தில் சீசன் துவங்கும். கேரளாவையும், தமிழகத்தையும் மலையுனுள் இணைக்கும் அருவிகளின் பிறப்பிடம் தென் பொதிகை மலை. தென்னகத்தின் ஸ்பா என்றழைக்கப்படுகிறது. (சிற்றாறு, மணிமுத்தாறு, தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடம்)ஆண்டுதோறும் ஜூன் துவங்கி ஆகஸ்ட் இறுதிவரை சீசன் காலம். இங்கு ஒன்பது அருவிகள் உள்ளன. அருவிகளில் தண்ணீர் கொட்டுவது மட்டுமல்ல, எப்போதும் பூப்போல பெய்து கொண்டிருக்கும் சாறலே குற்றாலத்தின் சிறப்பம்சமாகும்.
பேரருவி

பேரருவி: இது தான் பிரதான குற்றால அருவியாகும். மெயின் பால்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது குற்றாலம் பஸ் நிலையத்தின் அருகில் உள்ளது. 288 அடி உயரத்திலிருந்து பொங்குமாக் கடலில் விழுந்துபின் எழுந்து விரிந்து பரவி விழும் அருவி.
சிற்றருவி: பேரருவியின் மேலாக நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. பேரருவியில் பிரிந்து செல்லும் கிளை அருவியே சிற்றருவி. ஆண், பெண் தனியாக குளிப்பதற்கான வசதியுள்ளது.
சிற்றருவி
செண்பகா தேவி அருவி: பேரருவியில் இருந்து உயரத்தில் மலைப்பாதையில் 2 கி.மீ தூரத்தில் உள்ளது. 30 அடி உயர மலையில் விழும் அருவி இது. மலையழகிற்கு நடுவில் விழும் அருவி என்பது கூடுதல் அழகாகும்.
தேனருவி: செண்பகா தேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. அந்த அருவியின் அருகில் மரங்களில் தேன் கூடுகள் தொங்கும் அபாயகரமானது. குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
five  falls  

ந்தருவி: குற்றாலத்திலிருந்து ஐந்து கி.மீ தூரத்தில் உள்ளது. திரிகூட மலையின் உச்சியிலிருந்து 40 அடி உயரத்தில் உருவாகி சிற்றருவியின் வழியாக வந்து 5 கிளையாக பிரிந்து விழுகிறது.
பழத்தோட்ட அருவி: இது ஐந்தருவியிலிருந்து மலைப்பாதையில் 3 கி.மீ தூரத்தில் உள்ளது. விஐபிக் களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட இவ்வருவியில் தற்போது யாருக்கும் அனுமதி இல்லை.
புலியருவி: குற்றாலத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. குழந்தைகள் குளிப்பதற்கு ஏற்றது.
பழைய குற்றால அருவி: அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. குற்றாலத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.
Thumbnail for version as of 10:29, 25 December 2011
பழைய குற்றால அருவி
பாலருவி: இது தேனருவிக்கு அருகில் உள்ளது. ஒவ்வொரு அருவிக்கும் தனிச் சிறப்பு உள்ளதாக கூறப்படுகிறது. திரிகூட ராசப்ப கவிராயர் குற்றால குறவஞ்சியில் அருவிகளின் தனிச் சிறப்பை பதிவு செய்துள்ளார்.
ஆலயங்கள்: சோழ, பாண்டிய மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட குற்றால அருவியின் அருகில் குற்றால நாதர் ஆலயம் உள்ளது. அருவிக்கு ஒரு கோயிலும் உள்ளது. ஐந்தருவியில் சபரிமலை சாஸ்தா, முருகன் கோயிலும், செண்பகா தேவியில் செண்பகா தேவி அம்மன் கோயில், சித்ரா பௌர்ணமி தினத்தில் விழா கொண்டாடப்படும் காலங்களில் கூட்டம் அதிகமிருக்கும்.
குற்றால மலைகளில் மூலிகைச் செடிகளுக்கு இடையே நீர் வருவதால் நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளதாக கூறப்படுகிறது. மன நோயில் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று மாதங்கள் குளித்தால் போதும் சித்த பிரம்மை நீங்கிவிடும் என நம்பிக்கை கொண்டவர்களும் உண்டு. தீரா சரும நோய்கள் தீர்ந்து விடும் வாய்ப்புள்ளது.
.

கூந்தன் குளம்:

தமிழகப் பறவைகள் சரணாலயங்கள் (Tamil Nadu)
வெளிநாட்டு பறவைகளுக்காக இயற்கை அன்னை ஏற்படுத்தித்தந்த இலவச பிரசவ ஆஸ்பத்திரிதான் கூந்தன்குளம். திருநெல்வேலியில் இருந்து சுமார் 38கி.மீ தூரத்தில் நாங்குநேரி தாலுகாவில் அமைந் துள்ளது. இங்குள்ள பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் டிசம் பரில் படையெடுத்து வரும் வெளிநாட்டு பறவைகள் இங்குள்ள நீர்நிலைகளில் தங்கி விடுகின்றன. பின்னர் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரித்து குஞ்சுகளுடன் ஜுன், ஜுலை மாதத்தில் சொந்த நாடு களுக்கு பறந்து விடுகின்றன. சுமார் 35 வகையான பறவைகள் இவ்வாறு ஆண்டுதோறும் வந்து செல்கின்றன. பறவைகளை நேசிப்பவர்களுக்கு இந்த காட்சிகளெல்லாம் மிகவும் பரவசம் அளிக்கக்கூடியது.



முண்டன்துறை:


திருநெல்வேலியில் இருந்து சுமார் 56 கி.மீ தூரத்தில் முண்டன்துறை வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் புலி, சிறுத்தை உள் ளிட்ட பலவகை விலங்குகள் உண்டு. வனத்துறையிடம் அனுமதி பெற்று இங்கு மலையேற்றத்தில் (டிரெக்கிங்) ஈடுபடலாம். காட்டுக்குள் தங்கு வதற்கு வனத்துறை விருந்தினர் மாளிகை மற்றும் அருகில் அம்பாச முத்திரத்தில் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம் போன்றவை உண்டு. குடும்பத்துடன் செல்பவர்கள் இங்கு தங்கி இயற்கை அழகை ரசித்து விட்டு வரலாம்.

அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவி:


அகஸ்தியர் அருவி

பாபநாசத்தில் உள்ள அகஸ்தியர் அருவி பிரசித்தம். இதே பகுதியில் எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டும் இன்னொரு அழகான
அருவி பாண தீர்த்த அருவி.
பாண தீர்த்த அருவி.

முண்டன்துறை வனச்சரகத்தில் இது அமைந்துள்ளது. காரையார் அணையில் இருந்து படகு மூலம் இங்கு செல்லலாம். காட்டுப்பாதை வழியே நடந்தும் செல்லலாம். ரோஜா திரைப்படத்தில் சின்னச்சின்ன ஆசை பாடலில் அழகான ஒரு அருவி இடம் பெற்றிருக்குமே? அது இந்த பாணதீர்த்த அருவிதான். ரோஜா படத்தின் நினைவாக ரோஜா அருவி என்றும் அழைக்கின்றனர். இந்த அருவியின் அழகு உங்களையும் ஆடிப்பாட வைத்து விடும்.

மாஞ்சோலை:

மணிமுத்தாறு அருகே உள்ள ஒரு ஜிலுஜிலு மலைப்பகுதி மாஞ்சோலை. இதை ஒரு மினி ஊட்டி என்று கூட சொல்லலாம். தேயிலைத் தொழிற்சாலைகள் நிறைய உள்ளன. கோடையின் வெப்பத்தில் இருந்து தப்பிக்க மாஞ்சோலையில் சற்று ஒதுங்கி விட்டு வரலாம்.
Maancholai

 






உணவு, தங்குமிடம், போக்குவரத்து

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்த வரை சுத்தமான தண்ணீர் இங்கு உத்தரவாதம். நகரங்களில் நல்ல உணவு விடுதிகள் உள்ளன. தங்குமிடத்தைப் பொறுத்த வரையிலும் நல்ல லாட்ஜுகள், காட்டேஜ்கள் உள்ளன. அரசுத்துறை காட்டேஜ்களுக்கு முன்பதிவு செய்வது மிகவும் முக்கியம். போக்குவரத்தைப் பொறுத்தவரை திருநெல்வேலிக்கு அருகே தூத்துக்குடியில் விமான நிலையம் உள்ளது. திருநெல்வேலி நகரில் பெரிய ரயில்நிலையம் உள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து தாராளமாக இருக்கிறது. சாலை வசதியும் உள்ளது. கேரளாவுக்கு அருகில் உள்ள மாவட்டம் என்பதால் டைம் இருந்தால் கேரளாவுக்கும் ஒரு விசிட் செய்யும் ஏற்பாட்டுடன் வரலாம்.

ஒண்ணை....சொல்ல மறந்துட்டோமே! ஆ...அதேதான்... திருநெல்வேலி அல்வா. ஊர் முழுதையும் சுத்திப்பார்த்துட்டு அப்டியே திருநெல்வேலியில இருட்டுக்கடை அல்வாவையும் வாங்கிக்கிட்டு திரும்புனீங்கன்னா...பயணம் சும்மா கும்முனு இருக்குமுல்ல".
முன்று ஹல்வா பிரபலம் 
சாந்தி ஸ்வீட்ஸ் 
lakshmi  vilas lala ஸ்வீட்ஸ் 
nellai famous halwa 

special thanks to 
1.குற்றாலத்தின் தகவல் (இளைஞர் முழக்கம் ஆகஸ்ட் 2011 இதழில் வெளியானது)   
2. இன்று ஒரு தகவல் 

வாங்க வாங்க எங்க வீட்டுக்கு./././././


ur brother 
ரஹ்மான்FAYED ./...

 

No comments:

Post a Comment

welcome ur comment,